இலங்கைக்குள் நீதி கிடைக்கா விட்டால் சர்வதேச நீதிமன்றத்திற்கும் செல்ல தயார்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் நகலை தாம் கோரியுள்ளதாகவும், ஆனால் அது இன்னும் கிடைக்கவில்லை என்றும், உயிர்த்த ஞாயறு தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டம் இலங்கையில் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்றால் சர்வதேச தீர்ப்பாயத்திற்கு செல்ல அவர் தயாராக இருப்பதாகவும் பேராயர் மல்கம் கர்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (11) பேராயர் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றினார்.

அவர் மேலும் கூறினார்.

“நாம் சில விஷயங்களில் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். எனவே இதற்காக நாங்கள் காத்திருக்க முடியாது. விரைவில் ஒரு நகலை எங்களுக்கு அனுப்புங்கள். பின்னர் அந்த பிரச்சினைக்கு நாம் தீர்வுகளைக் காணலாம். நான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தேன். தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதவர்கள் மட்டுமல்லாமல், இந்த தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியவும் அந்த நேரத்தில் நானும் ஆணைக்குழுவிடம் கோரிக்கை வைத்தேன். எனவே அந்த கோரிக்கைக்கு ஆணைக்குழு சாதகமாக பதிலளிக்கும் என்று நம்புகிறேன். ”

கேள்வி: ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இலங்கையில் சட்டப்பூர்வமாக நீதி செய்யப்படாவிட்டால், நீங்கள் ஒரு சர்வதேச நீதிமன்றத்திற்குச் சென்று நீதி தேட விரும்புகிறீர்களா?

“தயார். எங்கள் தலைவர்கள் அதை நடக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். எனவே இந்த வழக்கு மற்றும் அறிக்கைகளிலிருந்து அவர்கள் நல்ல பதிலை அளிப்பார்கள் என்று நம்புகிறேன். அறிக்கைக்குப் பிறகு அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை நாம் காண வேண்டும். இல்லையென்றால், எங்களிடம் சர்வதேச அமைப்புகள் உள்ளன, வெளிநாடுகளில் அந்த அமைப்புகளின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.” என்றார்.