என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டேன்: ராகுல் காந்தி தெரிவிப்பு

தனது தந்தையான முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடையவர்களை மன்னித்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுவையில் கல்லூரி மாணவிகளிடையே உரையாற்றிய ராகுல் காந்தி, தனது தந்தையை இழந்தமை வலியைத் தந்ததாகவும் அதற்காக தாம் கோபப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கொலைக்கு பொறுப்பானவர்கள் மீது வெறுப்போ கோபமோ ஏற்படவில்லை என கூறிய ராகுல் காந்தி, அவர்களை மன்னித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.