கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட சந்திப்பு!

மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று 05-11-2025 புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் தலைமன்னார் பியர் மீனவ கூட்டுறவு சங்க பிரதிநிதிகளும், தாழ்வுபாடு மீனவ கூட்டுறவு சங்க பிரதிநிதிகளும் மன்னார் பிரதேச சபை உபதவிசாளர் திருமதி றொயிற்றன் சாந்தினி அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.