இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெகினோனுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் கனேடிய தூதுவருடன் ஜெனிவா மனித உரிமை பேரவையின் 46 வது கூட்டத் தொடரில் இலங்கை எதிராக முன்வைக்கப்பட உள்ளதாக கூறப்படும் யோசனை சம்பந்தமாகவும், இலங்கை தற்போது மேற்கொண்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது சம்பந்தமாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் சாதகமான பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தூதரக தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே மனித உரிமை பேரவையின் 46 வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.