சிறீலங்காவில் முதலீடுகளை மேற்கொண்டு அதன் கடன் சுமைகளை குறைப்பதற்கு அமெரிக்கா ஆர்வமாக இருப்பதாக சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா தெப்லிற்ஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மிகவும் சிறந்த வழிகளில் பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்கா உதவும். கடனை சிறீலங்கா அரசு சுமப்பதைவிட அதனை மீளச் செலுத்த வேண்டும். அதனுடன் சமூக மேம்பாட்டையும் சிறீலங்கா அரசு மேம்படுத்த வேண்டும்.
சிறீலங்காவில் நாம் சிறிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் அதனை பெருமளவில் மேற்கொள்ள ஆவலாக இருக்கிறோம். சிறீலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ள அமெரிக்காவின் இரு பெரிய எரிசக்தி நிறுவனங்கள் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.