ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இந்தப் பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 27ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சிரேஸ்ட தலைவர்கள் சிலர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொள்ளவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.