ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் மக்கள் போராட்டத்தால் பதற்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வீட்டுக்கு அருகில் நேற்று இரவு மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மீரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் இன்று இரவு கூடிய மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை உருவாகியுள்ளது.

எரிபொருள் நெருக்கடி மற்றும் மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதியின் வீட்டுக்கு செல்லும் வீதியை வீதித்தடைகளை போட்டு பொலிஸார் மூடினர்.

இதனை தொடர்ந்து பிரதேசவாசிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.