தமிழக முதல்வர் ஸ்டாலி­னுக்கு நன்றி தெரி­வித்­து பிரதமர் மஹிந்த கடிதம்

நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்தமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்­பி­வைத்­துள்ளார்

குறித்த கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

தமி­ழக சட்­டப்­பே­ர­வையில் தாங்கள் கொண்­டு­வந்த தனித் தீர்­மா­னத்­தின்­படி இலங்­கையில் தற்­போது நிலவி வரும் கடும் பொரு­ளா­தார சூழ்­நி­லையில் கடும் சிர­மத்­திற்கு ஆளாகி உள்ள மக்­க­ளுக்கு தமிழ்­நாட்­டி­லி­ருந்து உணவு, அத்­தி­யா­வ­சியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்­துகள் அனுப்பி வைக்­கப்­படும் என்று தாங்கள் அறி­வித்­துள்­ளமை தங்­க­ளது நல்­லெண்­ணத்தைக் குறித்­து­நிற்­கின்­றது.

இலங்கைப் பொரு­ளா­தார நெருக்­க­டியை அண்டை நாட்டுப் பிரச்­சி­னை­யாகப் பார்க்­காது மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் நோக்கும் தங்­க­ளிற்கும் தமிழ்­நாடு மாநில அரசிற்கும் இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No description available.