மக்களின் நலன்சார்ந்த நிவாரன பணிகள் சம்மந்தமாக எமக்கு சந்தர்ப்பம் வழங்கபடவேண்டும் என்ற கோரிக்கை மறுக்கப்பட்டது
டிட்வா புயலின் தாக்கத்தால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை மற்றும் அனர்த்தம் காரணமாக குறிப்பாக எமது வன்னி மாவட்டங்களில் எமது மக்கள் அனுபவிக்கும் துன்ப ,துயரங்கள், அவற்றில் இருந்து மீளுவதற்கான எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறுபட்ட விடயங்களை 1/12/2925 தினம் பாராளுமன்ற அமர்வில் எமது சார்பில் தெரிவிப்பதற்கான வாய்ப்புகள்,மற்றும் நேர ஒதுக்கீடுகள் என்பன வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கையை நாம் முன்வைத்திருந்தோம்.
ஆனால் எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கை மறுக்கப்பட்டதன் காரணத்தால் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்ப்பு சார்பில் இன்றைய விவாதத்தில் இருந்து வெளிநடப்பு செய்கின்றேன்.
அ.அடைக்கலநாதன்.
தலைவர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ )
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.