பசில் ராஜபக்ஸ மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றார்

ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக அவர் அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இன்று (12) அதிகாலை 3.15 மணிக்கு பசில் ராஜபக்ஸ புறப்பட்டுச் சென்றுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார்.