இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்தில் மாவட்டங்களுக்கிடையில் பயணத்தடை விதிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் பாதுகாப்பு பிரிவினக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை மாலை 6 மணியுடன் மூடவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.