புதுக்குடியிருப்பு சந்தை சுகாதார விதிமுறைகளின் திறக்க ஏற்பாடு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் சந்தை முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

இன்னிலையில் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அமைய வெத்திலை கடை நடத்தும் இருவர் மற்றும் சீட்டு பிடிக்கும் ஒருவர் உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இன்னிலையில் சந்தையினை மீள திறப்பதற்கு வணிகர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் நிலமைகள் தொடர்பான ஒரு கலந்துரையாடல் இன்று பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது இதன்போது படைத்தரப்பு,சுகாதாரதுறையினர் பொலீஸ் அதிகாரி,பிரதேச செலயல அதிகாரிகள் வணிகர்கள் சார்பானவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.

இன்னிலையில் நாளை செவ்வாய்கிழமை சந்தையினை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய திறப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.