பொத்துவில் பொலிகண்டி பேரணி முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அடைந்தது-ரெலோ தலைவர் செல்வம் உயிரிழந்த மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சுடர் ஏற்றப்பட்டது!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அடைந்துள்ளது.

அங்கு இறுதிப் போரில் உயிரிழந்த மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட தமிழர்களின் உரிமை கோரிய பேரணி, நீதிமன்றத் தடை, பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரின் பல தடைகளையும் தாண்டி தற்போது முல்லைத்தீவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவு நகரத்தில் பயணித்து, மாவட்டச் செயலகம் வரை சென்ற பேரணி, அங்கிருந்து முள்ளிவாய்க்கால் நினைவிடம் வரை வாகனக் பேரணியாகச் சென்றடைந்துள்ளது.

ரெலோ தலைவர் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் , மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ வினோ நோகராதலிங்கம்,ரெலோ பிரதி தலைவர் பிரசன்னா,ரெலோ தேசிய அமைப்பாளர் சுரேன்,ரெலோ யாழ் பிரதி மேயர் ஈசன், ரெலோ இளைஞர் அணி செயலாளர் சபா குகதாசன்,ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலி கிழக்கு தவிசாளருமான நிரோஜன்,ரெலோ கரைத்துறைபற்று உப தவிசாளர் ஜெனமேயந்தன்,ரெலோ முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பாளர் புவனேஸ்வரன் அவர்களும் கட்சியின் உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர், பிரதேச சபை உறுப்பினர் மற்றும் ஆதரவாளர்களுடன், போரில் உயிரிழந்தோர் நினைவுகூரப்பட்டு அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து அங்கு மதிய போசனம் இடம்பெறுகிறது.