பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்து கொண்டார் என பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர், விடுவிக்கப்பட்டார்.
பேரணியில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் இன்ற பகல் இளைஞர் ஒருவரை பருத்தித்துறை பொலிசார் கைது செய்தனர். பேரணியில் பதிவு செய்யப்பட்ட காணொலியின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள் இலக்கத்தின் மூலம் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு, இளைஞன் கைதானதாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்தனர்.
பல மணித்தியாலங்களாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் இளைஞன் தடுத்து வைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
பின்னர், தாயாரிடம் இளைஞன் ஒப்படைக்கப்பட்டார்.