பொத்துவில் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்டமைக்காக வினோ நோகராதலிங்கத்திடம் பொலிஸார் வாக்கு மூலம் பதிவு

நீதிமன்ற கட்டளையை மீறி பொத்துவில் பொலிகண்டி பேரணியில் மாங்குளத்தில் கலந்து கொண்டமைக்காக மாங்குளம் பொலிசாரால் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் .

நேரமின்மையென பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவர்களால் கூறப்பட்டதற்கிணங்க வவுனியா ரெலோ மாவட்ட கட்சி அலுவலககத்துக்கு வந்த பொலிசார் விசாரணையை மேற்கொண்டனர்.

இதன்போது தமிழ் மக்களின் உரிமை கோரிய நியாயமான ஜனநநாயக போராட்டத்தில் மக்களோடு இணைந்து கலந்து கொண்டதாக தமது உணர்வுடன் கூடிய விளக்கத்தை பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.