பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கால்நடைகளை இழந்தோர், மீனவர்களுக்கான நிவாரணங்கள் மற்றும் மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் அடிப்படை குறைபாடுகளுக்கான தீர்வு உள்ளீட்டு பலதரப்பட்ட கோரிக்கைகளை ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் தலமையில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று 13.12.2025 தினம்
மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
.
மேற்படி கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும், வடமாகாண மற்றும், மன்னார் மாவட்ட திணைக்களங்களின் அதிகாரிகளும், பங்கேற்றிருந்தனர்.
கலந்துரையாடலின் போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள் அவற்றுக்கான தீர்வையும் வழங்கியிருந்தார்.
அந்த வகையில் நடைபெற்ற பேரிடரால் வடமாகாணத்தில் அதிகளவு பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் விவசாயிகள், குறிப்பாக ஆடு மாடு போன்ற கால்நடைகளை இழந்தவர்களுக்கான இழப்பீட்டை பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்கவேண்டும் என்றும்
மன்னார் மாவட்டத்தில் அதிகளவு பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கு மட்டுமே சலுகைகள், நிவாரணம் வழங்கப்படுகிறது என்றும் வாழ்வாதாரமான கடற்றொழில் பாதிக்கப்பட்டு தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் மன்னார் மாவட்ட மீனவர்கள் அதிகம் உள்ளதை சுட்டிக்காட்டியதை தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் அனைத்து மீனவ குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு கட்டளை பிறப்பித்திருந்தார்.
மற்றும் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் காணப்படும் அடிப்படை தேவைகளை, குறைபாடுகளை பூர்த்திசெய்ய கோரிக்கை விடுத்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள் சுகாதார அமைச்சரோடு கலந்தாலோசித்து மேற்கொள்ளவேண்டிய அனைத்து அடிப்படை பிரச்சனைகள் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாகவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.