ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளால் இலங்கைக்கு பாதிப்பு; தேயிலை ஏற்றுமதியிலும் தாக்கம் ஏற்படும் – நிதி ஆய்வாளர்கள்

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள தடைகளால் இலங்கை நேரடியாக பாதிக்கப் படும் என நிதி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையின் முன்னணி தேயிலை இறக்குமதி யாளர்களில் ஒன்றான ரஷ்யாவுடனான ஒப்பந்தங்களில் இது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதனால் தேயிலை ஏற்றுமதிக்கு பணம் கிடைப் பதில் சிக்கல் ஏற்படும் என்றும், ஐரோப் பிய நாடுகள் ரஷ்ய வங்கி அமைப்புடன் தனித்தனி யாக கொடுக்கல் வாங்கல் செய்தால் இலங்கைக்கு எதிர்மறையான அணுகுமுறையே ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், அண்மைக் காலமாக இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து வந்துள்ளனர். அந்தத் தொகை அண்ணளவாக 30% ஆகும். யுத்த சூழ்நிலையால் எண்ணிக்கை குறைவது தவிர்க்க முடியாததாகி விடும்.