யாழ்.வல்வெட்டித்துறை நகர சபைத் தவிசாளர் கோணலிங்கம் கருணானந்தராசா(வயது-76) கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை(11-08-2021) உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்குப் பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா நோய்த் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்துப் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.