விசேட குற்றப்பிரிவு காரியாலயத்திற்கு வருகை தருமாறு- ரெலோ உப தலைவர் பிரசன்னாவிற்கு அழைப்பு

கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உப தலைவருமான இந்திரகுமார் பிரசன்னாவை விசாரணைக்கு உட்படுத்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் காரியாலயத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இ.பிரசன்னா தெரிவித்துள்ளார்.

நேற்று அவரது வீட்டுக்கு வருகை தந்த இரண்டு புலனாய்வுத்துறையினர் அவரிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என்பதற்காக நாளை அவரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் காரியாலயத்தில் அமைந்துள்ள குற்றப்புலானாய்வு பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், முகநூல் போராளிகள் போன்றவர்கள் தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும், அச்சுறுத்தும் நிலைமையும் மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.