ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தில் ஈடுப்பட்டபோது கைது செய்யப்பட்ட அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரின் நடவடிக்கை
மேற்குறிப்பிட்ட போராட்டம், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் மல்லாகம் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறாக பொலிஸாரினால் கைது செய்யப்படும் போது கடும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டே கைது செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
இவ்வாறு தாக்குதல்களுக்கு உள்ளான வேலன் சுவாமிகள் ஏற்கனவே யாழ். போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆண்கள் விடுதி 9இல் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் 24-12-2025 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.