1000 ரூபா சம்பளம் அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான தீர்மானமாகும்

தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம் அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான தீர்மானமாகும். இதற்கு எதிராக தோட்ட கம்பனிகள் செயற்பட்டால் அரசாங்கம் அதற்கு எதிராக பின் நிற்கப் போவதில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த சம்பள பிரச்சினை தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினார். நியாயமான தீர்வொன்றை இந்த விடயத்தில் எட்டுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது எனவும் அமைச்சர் கூறினார்.

கொள்கை ரீதியில் அரசாங்கம் மேற்கொண்ட 1000 ரூபா சம்பள விடயத்திற்கு நிறுவனங்கள் உடன்பாடு தெரிவிக்கவில்லை. இதனாலேயே சம்பள நிர்ணய சபையின் ஊடாக இதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு எதிராக நிறுவனங்கள் செயற்பட்டால், கொள்கை ரீதியில் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் என்ற நிலைப்பாட்டை செயற்படுத்த ஒருபோதும் அரசாங்கம் பின்நிற்காது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.