மூதூர் அம்மன் நகர் வித்தியாலய முன்பள்ளி பாலர் பாடசாலைக்கு நிதி உதவி -ரெலோ திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசம் கட்டைப்பறிச்சான் அம்மன் நகரில்
அம்மன் நகர் வித்தியாலயத்தின் முன்பள்ளி பாலர் பாடசாலை திருகோணமலை மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்க ( ரெலோ) அமைப்பால் மீள் புனரமைக்கப்பட்டு வர்ண ஓவியங்கள் வரையப்பட்டு முன்பள்ளிக்குத் தேவையான கற்றல் உபகரணங்களும் பிள்ளைகளுக்குரிய பாதணிகளும் பாடசாலை முன் அலங்கரிப்புக்காக பூச்சாடிகளும் ரூபா. 50 000 பெறுமதியில் வழங்கப்பட்டது. இதற்கான நிதி உதவியை ரெலோவின் மூத்த உறுப்பினரும் பிரித்தானியாவில் வசிப்பவருமான புவனேஸ் [ உப்புவெளி ] வழங்கியிருந்தார்.

இன்று பிற்பகல் 3 மணிக்கு என்னுடன் திருமலை மாவட்ட ரெலோ அமைப்பாளர் விஜயகுமார் ( சார்ல்ஸ்) , திருமலை மாவட்ட வெளிநாட்டுக் கிளைத் தொடர்பாளர் சிதம்பரநாதன் ( மணி) , கட்சி முக்கியஸ்தர் கமலேஸ், சஞ்சீவன் ஆகியோர் கலந்து கொண்டு மீள் திறப்பு விழாவைச் செய்திருந்தோம்.

மதிப்பிற்குரிய அதிபர் இராசதுரை அவர்கள் இந்நிகழ்வை நடத்தி இருந்தார். ரெலோவின் ஆரம்பகால உறுப்பினர்கள் அதிகமாக வசித்த இடம் அம்மன் நகர் என்பது குறிப்பிடத்தக்கது.