சீனா வழங்கிய கொரோனாவைரஸ் தடுப்பூசியை இலங்கைமக்களிற்கு வழங்க கூடாது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிததுள்ளனர்.
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 600,000 கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவது குறித்து அரசமற்றும் தனியார்துறையை சேர்ந்த சிரேஸ்ட மருத்துவ நிபுணர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சீனாவின் தடுப்பூசி குறித்தும் அதற்கு அவசர அனுமதியை வழங்கலாமா என்பது குறித்தும் ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவை நியமித்தது என மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் அந்த குழு சீனாவின் தடுப்பூசியின் பாதுகாப்பு திறன் போன்றவை குறித்து உறுதி செய்வதற்கான போதுமான தரவுகள் இல்லை என தெரிவித்துள்ளது என மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் சீனாவின் தடுப்பூசியை தற்போதைய சூழ்நிலையில் பயன்படுத்தகூடாது என தீர்மானிக்கப்பட்டது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை சுகாதார கொள்கைகள் குறித்த நிறுவகத்தின் இயக்குநர் வைத்தியர் ரவீந்திர ரனஎலிய சீனாவின் தடுப்பூசி போதுமான தகவல்களை கொண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளார். நான் அதனை உள்நாட்டு பாவனைக்கு அனுமதிக்கமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.