வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், ரெலோ அமைப்பின் பொருளாளருமான விந்தன் கனகரத்தினத்தினமும் மற்றும் அவரது குடும்பத்தினரும் யாழிலிருந்து துணுக்காய் நோக்கித் திருமண வைபவம் ஒன்றிற்காகச் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த இராணுவ வாகனம் மோதி விந்தன் கனகரத்தினம் பயணம் செய்த ஹைஏஸ் வாகனம் கடும் சேதங்களுக்கு உள்ளானது.
குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (09) பிற்பகல்-03 மணியளவில் முல்லைத்தீவு வெள்ளாங்குளம் காட்டுப் பகுதியில் நடந்துள்ளது.
எனினும் தெய்வாதீனமாக விந்தன் கனகரத்தினத்துக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
வேகமாக வந்த வெள்ளாங்குளம் 65 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினரின் வாகனம் பின்னால் விந்தன் கனகரத்தினம் பயணம் செய்த வாகனத்தை மோதியுள்ளது. இந்நிலையில் மோதிவிட்டுத் தப்பிச் செல்ல இராணுவத்தினர் முயற்சித்த நிலையில் விந்தன் கனகரத்தினம் அவர்களைத் தடுத்து நிறுத்தி மல்லாவிப் பொலிஸாருக்குச் சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளார். இதனையடுத்துப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகள் மேற்கொண்டதுடன் சம்பவ இடத்தில் பொதுமக்கள் பலரும் ஒன்றுகூடினர்.