மலர்ந்துள்ள தமிழ் புத்தாண்டில் ஈழத்திலும் புலம்பெயர் தேசமெங்கும் அமைதியும் சமாதானமும் மலர தாங்கள் ஆசிப்பதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
இன்று சர்வதேச அரங்கில் சமவுரிமை ஐக்கியம்,சமாதானம் ஆகியன பெரிதும் தேவையானவைகளாக காணப்படுகிறது.
எமது முன்னோர்களின் பண்பாடான விட்டுக்கொடுப்பு ,சகிப்புத்தன்மை ஆகிய அறங்களை எமது இளைய தலைமுறையினருக்கு கொடையாக்கி எமது வருங்கால சந்ததியினரை நாம் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம்.
எம்மை சுற்றி கொரோணா அபாயமும் இன்னும் தீராத நிலையில் நாம் இந்த புத்தாண்டை மிக நிதானமாக சுகாதார வழிமுறைகளையும் பேணி கொண்டாடுமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் எமது பாரம்பரியங்களையும், மரபுவழிமுறைகளையும், கலாச்சார பண்புகளையும் பேணி அன்பு இரக்கம் ஆகியவற்றோடு ஆசித்தவர்களாக எமது தாயக தேசமும், நாமும் சிறக்க இந்த புதுவருடத்தில் உறுதி கொள்வோமாக.
என்றும் அன்புடன்.
கெளரவ செல்வம் அடைக்கலநாதன்
தலைவர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்