நாட்டை சீனாவின் காலணித்துவத்தின் கீழ் கொண்டுவருவதை எதிர்ப்பதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டம் தொடர்பில் தௌிவூட்டுவதற்காக இன்று (15) விசேட ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாரஹேன்பிட்ட அபயாராம விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இதனைத் தெரிவித்தார்.