எதிர்வரும் தேர்தல்களில் உட் கட்சிநெருக்கடிகளைக் கொண்ட அரசியல் கட்சிகளிடமிருந்து வேட்பு மனுக்களை ஏற்க வேண்டாம் என்று தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
உட்கட்சி மோதல்கள் உள்ள கட்சிகள் அவை தீர்க்கப்படும் வரை அந்தக் கட்சிகளிடமிருந்து எந்தவொரு வேட்புமனுவையும் பெறாது என்று தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.