கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று (02) தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில்,
திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உவர்மலை மற்றும் உப்புவௌி பொலிஸ் பிரவின் அன்புவழிபுரம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பொலிஸ் பிரிவின் நீலந்தஹின்ன கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது.
பிலியந்தலை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இவைதவிர, களுத்துறை மாவட்டத்தின் வலானை வடக்கு, வேக்கட மேற்கு, கிரிபேரிய, பாலமுல்ல கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
