யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்தியத் துணைத் தூதுவராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் கண்டியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் தற்போது கடமையாற்றி வரும் நிலையில் விரைவில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இதேவேளை, இதுவரைகாலமும் யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவராக ஆர். பாலச்சந்திரன் சிறப்பாக கடமையாற்றி வந்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.