1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தமிழ் இன அழிப்பை தொடர்ந்து ஜூலை 25, 27ஆம் திகதிகளில் வெலிக்கடை சிறச்சாலைக்குள் நடைபெற்ற படுகொலைகளில் ஆயுதப் போராட்ட ஆரம்ப கர்த்தாக்கலான தேசபிதா தங்கதுரை, தளபதி குட்டிமணி,முன்னணி போராளிகளான ஜெகன், தேவன்,நடேசுதாசன், குமார்,சிவபாதம்,சிறிக்குமார்,மரியாம்பிள்ளை,குமாரகுலசிங்கம் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகள் படுகொலை செய்ததன் 38வது நினைவு தினம்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் 38வது கருப்பு ஜூலை , வெலிக்கடை படுகொலை நினைவுதினம் இன்று ஞாயிறறுக்கிழமை(25-07-2021) பகல் திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவு அரங்கத்தின் முன்னால் சுடரேற்றி அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் ( ஜனா) தலைமை இல் நடைபெற்ற இன் நிகழ்வில்
தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உப தலைவரும் கிழக்குமாகாண சபை இன் முன்னாள் பிரதி தவிசளரு மான இந்திரகுமார பிரசன்னா, கட்சியின் இளைஞரணி உப தலைவர் இரத்தின ஐயா வேணு ராஜ் மற்றும் ஆதரவாளர்களும கலந்து கொண்டனர்.
சிறிலங்காவின் அடக்குமுறைகளை தகர்த்தெறிந்து,போலீசாரின் தடையை மீறி இன் நிகழ்வு நடத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.