ஆதரன வரி பதிவு நடவடிக்கைக்கு ஒத்துளைக்குமாறு ரெலோ தவிசாளர் கோரிக்கை!

முல்லைத்தீவுமாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட முல்லைத்தீவு பகுதியில் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் ஆதன வரி தொடர்பிலான பதிவு நடவடிக்கை 04.08.21 இன்று தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள வீடுகளின் ஆதன வரி தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக மக்களின் வீடுகளுக்கு செல்லும் அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துளைப்பினை வழங்குமாறும் தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.