சர்வதேச நாயண நிதியத்தை நாடுவதே டொலர் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு – ரெலோவின் இளைஞர் அணித் தலைவர்

சர்வதேச நாயண நிதியத்தை நாடுவதே சிறிலங்காவின் டொலர் பிரச்சினைக்கு இறுதித் தீர்வாகும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார, டொலர் நெருக்கடி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

இலங்கை அரசாங்கம் தற்போது எதிர் கொள்ளும் பாரிய பிரச்சினை டொலர் பற்றாக்குறையாகும். கஐானாவில் இருப்பில் உள்ள டொலர் 1.5 பில்லியனாகும் ஆனால் டிசம்பர் மாத இறுதியில் சர்வதேச தவணைக் கடன்கள் செலுத்த 2 பில்லியன் டொலர் தேவை அத்துடன் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய மேலும் ஒரு பில்லியன் டொலர் தேவை அத்துடன் துறைமுகத்தில் கப்பல்களில் காத்திருக்கும் உணவுப் பொருட்களை இறக்க வங்கிகளினால் எல் சீ கொடுக்க முடியாத அளவிற்கு டொலர் பற்றாக்குறை உள்ளது இதனால் பெரும் நெருக்கடிக்குள் ஏழாம் அறிவு நிதி அமைச்சர் உட்பட்டுள்ளார்.

டொலரை பெற அமைச்சர் பசில் இந்தியா சென்று முதல் கட்டம் 500 மில்லியன் டொலர் கோரியுள்ளார் சீனாவிடம் 1.5 பில்லியன் டொலர் கேட்டுள்ளார் தற்போது 16 திகதி டுபாய்க்கு சென்றுள்ளார் டொலர் தேடும் பணிக்கு ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகள் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக ராஐதந்திர வட்டாரங்கள் மூலம் செய்திகள் வந்துள்ளன இதனால் மேலும் நெருக்கடிகள் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் ஐனாதிபதியின் பிடிவாதப் போக்கினாலும் மத்திய வங்கி ஆளுநரின் பதவி ஆசையாலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் , உலக வங்கி, ஜீ 7 நாடுகள் போன்றவற்றை நாட விடாது தடுப்பதாக ஆளும் கட்சித் தரப்பினர் கூறுகின்றனர் .

உண்மையாக சிங்கள மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மீறி பல நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டிய நிலை இருப்பதன் காரணமாகவே ஐனாதிபதி சர்வதேச நாயண நிதியம் போன்ற அமைப்புக்களிடம் செல்ல மறுப்பதற்கான உண்மை நிலை. ஆனால் என்ன நிபந்தனை வந்தாலும் இறுதியில் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றுதான் டொலர் பிரச்சினைக்கான தீர்வை சிறிலங்கா அரசாங்கம் வேண்டும்