முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணியொன்று அமைக்கப்படவுள்ளதுடன், அதில் அரசாங்கத்திலுள்ள சிலர் இணைந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்திரிகாவின் தந்தை பண்டாரநாயக்கவின் நினைவுதின நிகழ்வு நேற்று நடைபெற்ற நிலையில் சந்திரிகா உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்கள் அந்த நிகழ்வின் போது சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், சந்திரிக்கா தலைமையில் புதிய கூட்டணியை அமைப்பதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.