பக்கத்து பேரசுகளின் ஆசீர்வாதம் இல்லாமல்? ஈழநாடு Editorial

சிறிய நாடுகளின் இறைமை என்பதை எப்போது வேண்டுமானாலும், அதன்
அருகிலுள்ள பேரசுகள் தகர்க்க முடியும். எந்த உலக சட்டங்களாலும் அதனை
தடுத்து நிறுத்த முடியாது. சிறிய நாடுகளின் பாதுகாப்பும், அமைதி
யும் – குறித்த நாடுகள், அருகிலுள்ள பேரசுகளுடன் எவ்வாறு நடந்து கொள்
கின்றன என்பதை பொறுத்தே அமையும். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு
இதற்கான நவீன உதாரணமாகும். ரஷ்யாவின் விருப்பங்களை புறம்தள்ளி,
உக்ரைன் நேட்டோ கூட்டணியில் இணைந்து கொள்ள முற்பட்டதன்
விளைவாகவே ரஷ்யா, உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை முன்
னெடுத்திருக்கின்றது. தனது நாட்டை காப்பாற்றுவதற்காக, உக்ரைன் ஜனாதிபதி
யுத்த களத்திற்கு சென்றிருக்கின்றார். தாம் தனித்து போரிடுவதாகவும், ஒரு
நாடும் தமக்கு ஆதரவாக வரவில்லையென்றும் உக்ரைன் ஜனாதிபதி தெரி
வித்திருக்கின்றார்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை சிலர் இலங்கை மீதான இந்திய
படையெடுப்போடு ஒப்பிட்டு எழுதியிருப்பதை காண முடிகின்றது. சில
ஒற்றுமைகள் இருக்கின்றன என்பது உண்மைதான். அதாவது, அப்போதிருந்த
ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி நிர்வாகம்
முன்னெடுத்த வெளிவிவகாரக் கொள்கையின் காரணமாகவே, அப்போதிருந்த
இந்திரா காந்தி தலைமையிலான இந்திய நிர்வாகம் அதிருப்தியடைந்தது.
ஜே.ஆர். ஜெயவர்த்தன, இலங்கையின் பாரம்பரியமான அணிசாரா
கொள்கையிலிருந்து விலகி, மேற்கு சார்பான. அமெரிக்க சார்பான
வெளிவிவகாரக் கொள்கையை கடைப்பிடித்தார். பிராந்திய சக்தியான
இந்தியாவை முற்றிலும் புறம்தள்ளி செயற்பட எத்தணித்தார். இதனால் இந்திரா
காந்தி அதிருப்தியடைந்தார். இதனைத் தொடர்தே, இலங்கையின் தமிழர்
பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையீடு செய்தது. ஈழத் தமிழ் ஆயுத
அமைப்புக்களுக்கு பயிற்சியளித்து, அவர்களுக்கு ஆயுதங்களையும் நிதியையும்
வழங்கியது. ஜெ.ஆர்.ஜெயவர்த்தன அரசிற்கு நெருக்கடிகளை கொடுத்தது.
தனக்கு அமெரிக்கா கைகொடுக்குமென்றே ஜே.ஆர் நம்பி யிருந்தார்.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான், ஜே.ஆர். அமெரிக்காவை
அணுகினார் ஆனால் அது நடைபெறவில்லை. இந்த அனுபவத்திலிருந்து
தான் ஜே.ஆர். இந்தியாவுடன் இணங்கிச் செல்லும் முடிவை எடுத்திருந்தார்.
ஒரு வேளை ஜே.ஆர், அன்று இணங்கிச் செல்லாது முரண்டு பிடித்திருந்தால்,
இலங்கைத் தீவு இரண்டு துண்டுகளாக உடைந்திருக்கவும் வாய்ப்புண்டு.
அல்லது, இந்திய இராணுவம் இலங்கைத் தீவை முற்றிலுமாக கைபற்
றியிருக்கலாம். ஆனால் ஜே.ஆர். நிலைமைகளை விளங்கிக் கொண்டு ஒரு
தேர்ந்த இராஜதந்திரியாக நடந்து கொண்டார். இந்தியாவுடன் நட்புக்
கொள்வதற்கான அனைத்து வாய்ப்புக்களையும் கொண்டிருந்த ஈழத்
தமிழர்களோ, பாரதத்துதோடு மோதி, இறுதியில் அரசியல் கையறு நிலைக்குள்
தள்ளப்பட்டனர்.

ரஷ்யாவின் படையெடுப்பு, பக்கத்து பேரசுகளை புறத்தள்ளி செயற்பட்
டால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு புதிதாக கிடைத்திருக்கும்
ஒரு சான்று. பக்கத்து பேரசுகளை அனுசரித்து செல்லாத போது, பக்கத்து
பேரசுகள் சிறிய அயல்நாடுகளை தண்டிக்கும். பேரசுகளின் அனுகுமுறை
களில் நீதி, நியாயம், கருணை எதனையும் எதிர்பார்க்க முடியாது. உலக
அரசியல் வரலாறு தொடர்பில் புரிதலுள்ள எவரும் அவ்வாறு சிந்திக்க
மாட்டார்கள்.

பக்கத்து பேரரசுகளை புறம்தள்ளி செயற்படுவதன் விளைவை, ஈழத்
தமிழர்களும் இன்று நன்கு புரிந்துகொண்டிருக்கின்றனர். இங்கு எங்களுடைய
விருப்பு வெறுப்புகள் முக்கியமல்ல. ஏனெனில் பேரசுகள் சிறிய நாடுகளின்
மக்களது விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதில்லை.
உக்ரைன் மக்களது விருப்பங்களின் அடிப்படையில் ரஷ்யா அதன் முடிவுகளை
எடுக்கவில்லை. இந்திய இராணுவத்தை இலங்கையின் நிலைகொள்ளும்
முடிவை எடுத்த போதும் – இங்குள்ள எவருடைய விருப்பங்களும்
கேட்கப்படவில்லை.

பேரசுகளின் தீர்மானங்கள் அப்படித்தான் அமைந்திருக்கும். பக்கத்து
பேரசுகளை அனுசரித்து செல்ல வேண்டியது, சிறிய அயல்நாடுகளின்
கடைமையாகும். அந்தக் கடைமையை செய்யாத போது – அதன் பலனையும்
அனுபவிக்க வேண்டிவரும் என்பதுதான் பேரசுகளின் பதில். பக்கத்து
பேரரசுகளை புறம்தள்ளி செயற்பட்டு, பேரரசின் கோபத்திற்கு ஆளாகி
னால், எந்தவொரு நாடும் குறித்த சிறிய நாட்டிற்காக சண்டையிட்டு சாகப்
போவதில்லை.