பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சருக்கு வடக்கு கிழக்கு மக்கள் சார்பாக நன்றியும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஐந்து வருடம் முதல் 200 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களாவார்.
இவ்வாறு விடுவிக்கப்படுவோரின் பெயர்களையும் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. வெளியிட்டார். அவர்களின் பெயர்கள் வருமாறு,
01) வரதராஜன்
02) ரகுபதி சர்மா
03) இலங்கேஷ்வரன்
04) நவதீபன்
05) ராகுலன்
06) காந்தன்
07) சுதா
08) ஜெபநேசன்