நாட்டில் சட்டம் எல்லோருக்கும் சமம் எனக் கூறும் ஜனாதிபதி அநுர ஏன் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரத்தில் சட்டம் எல்லோருக்கும் சமம் என்பதை நிலை நாட்டவில்லை அப்படி என்றால் நாட்டில் இரண்டு சட்டமா? வடக்குக்கு ஒரு சட்டம் தெற்கிற்கு பிறிதொரு சட்டமா என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வி எழுப்பினார்.
இது குறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தனியார் காணியில் அத்துமீறி கட்டிய விகாரை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் சட்டரீதியாக கோரி நிற்கும் விடையத்தை தட்டிக்கழித்து மீண்டும் அந்த மக்களின் காணியில் மேலதிக கட்டங்களை கட்டிக் கொண்டு நாட்டில் எல்லோருக்கும் சட்டம் சமம் என்று கூறுவது ஜனாதிபதியின் பெரும் பித்தலாட்டம்.
தெற்கில் நாட்டில் சட்டம் எல்லோருக்கும் சமம் என்று பேசிக் கொண்டு வடக்கில் சட்டத்தை அரச திணைக்களம் மற்றும் இராணுவ முகாம்கங்கள் போன்ற வற்றின் செயற்பாடுகள் மூலம் வடக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை தடுப்பது எந்தவகையில் சட்டம் எல்லோருக்கும் சமம் என்பதை உறுதி செய்கிறது ஆகவே ஜனாதிபதி கடந்த கால ஆட்சியாளர்கள் போன்ற சாத்தான் வேதம் ஓதுகின்றார் என தெரிவித்தார்.