தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை 6/10/2025 இடம் பெற்றது.
மேற்படி கலந்துரையாடல் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் திரு.சாள்ஸ் அவர்களது தலமையில் நடைபெற்றது, வட்டார கிளையின் செயற்பாடுகள் மற்றும் இனிவரும் காலங்களில் நடக்க இருக்கும் மாகாண சபை தேர்தலை எப்படி எதிர் கொள்வது , திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் போன்ற விடயங்கள் கலந்தாய்வு செய்யபட்டது, இவ் லந்துரையாடலின் போது திருகோணமலை மாவட்ட பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள், கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் ,திருகோணமலை மாவட்ட துணை மாவட்ட பொறுப்பாளர் திரு.பிரபா, பீரித்தானியாவில் இருந்து வருகை தந்திருந்த திரு.பீற்றர், திரு.றூபன், திரு.றதன், மற்றும் முன்னாள் பிரான்ஸ் தேசத்தின் ரெலோ கட்சியின் பொறுப்பாளர் திரு.லோகன், ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.