மோடிக்கான ஆவணத்தில் தமிழ்த் தலைவர்கள் ஒப்பம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காகத் தமிழ்பேசும் தரப்புக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவணத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் கட்சிகள் இன்று வியாழக்கிழமை ஒப்பமிட்டன.

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி இறுதி செய்யப்பட்ட ஆவணத்தில் சம்பந்தன் உட்படதலைவர்களும் இன்று ஒப்பமிட்டனர். அது விரைவில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஊடாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைக்கப்பட்டவுள்ளது.

அந்த ஆவணத்தில் இரா.சம்பந்தன் (தலைவர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு), சி.வி.விக்னேஸ்வரன் (தலைவர் – தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி), சுரேஷ் பிரேமச்சந்திரன் (தலைவர் – ஈ.பி.ஆர்.எல்.எப்.), என்.ஸ்ரீகாந்தா (தலைவர் – தமிழ்த் தேசியக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (தலைவர் – ரெலோ), த.சித்தார்த்தன் (தலைவர் – புளொட்) ஆகியோர் இன்று ஒப்பமிட்டனர்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாத் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் நேரில் சென்று சம்பந்தனிடம் கையொப்பம் பெற்றதைத் தொடர்ந்தே ஏனைய தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து இன்றிரவு கொழும்பு வரும் மாவை சேனாதிராஜா (தலைவர் – இலங்கைத் தமிழரசுக் கட்சி) நாளை காலை அந்த ஆவணத்தில் ஒப்பமிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுக்கள் பல்வேறு கட்டடங்களாக நடைபெற்றுவந்த நிலையில், இறுதியாக தயாரிக்கப்பட்ட ஆவணம் கடந்த டிசம்பர் 21ஆம் திகதி கொழும்பிலுள்ள குளோபல் டவர் ஹோட்டலில் நடைபெற்ற தமிழர் தரப்புக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட கடிதமே இப்போது தமிழ்க் கட்சிகளின் தலைவர்களால் ஒப்பமிடப்பட்டு இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படுகின்றது.

தமிழ் தேசிய பங்காளி கட்சியான ரெலோவின் முயற்சியினால் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைளையும் முன்வைத்து ஆவணமொன்றை அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்தியத் தூதுவரைச் சந்தித்து இந்தக் கடிதத்தை அவர் மூலம் இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைப்பர் என ஏற்பாட்டாளர்கள் ஆகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பில் இச்செயற்பாட்டின் ஒருங்கிணைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை நிதியுதவி கோராது! அமைச்சரவையில் எதிர்ப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி கோருவதற்கான அமைச்சரவைக் கூட்டம் இணக்கமின்றி முடிந்தது. இதனால், சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை நிதியுதவி கோராது என்று தெரியவருகின்றது.

நேற்று முன்தினம் இரவு நடந்த அமைச் சரவை கூட்டத்தில் சர் வதேச நாணய நிதி யத்திடம் நிதி உதவி கோருவதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் அனுமதி அளிக்கவில்லை என்று தெரிய வருகின்றது.

நிதியுதவிக்காக சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் நிபந்தனை களை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லா மையே இதற்குக் காரணம் என்று தெரிய வருகின்றது. அரசாங்கம் கோரினால் இலங்கைக்கு நிதி அளிப்பது தொடர்பில் ஆராயப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் மசா ஹிரோ நோசாகி கூறியிருந்தார்.

இந்நிலை யில், அது தொடர்பில் ஆராய்வதற்காக கூடிய அமைச்சரவை இணக்கமின்றி நிறை வடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக் கது.

இந்தியா தமிழ் தேசத்தை அங்கீகரிகும் முகமாக செயற்படவேண்டும் – சுரேஷ்

இந்தியா வடகிழக்கு இணைக்கப்பட்டு ஒரு தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் முகமாக தனது அரசியல் நடவடிக்கையை எடுக்கவேண்டும். அதைவிடுத்து தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தூக்கி கொண்டு சீனாவை தடுக்கும் முகமாக நீங்கள் உங்களுடைய முகவர்களை பாவித்து பல கூட்டுக்களையும் பல ஒப்பந்தங்களையும்  செய்து அதன் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவேண்டும்.  என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட காரியலயத்தில் இன்று இடம்;பெற்ற அமரர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் 22 வது நினைவேந்தல் சுடர் ஏற்றி அஞ்;சலி செலுத்திய பின்னர் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

அந்த கொடிய யுத்தம் நடந்து கொண்ட காலத்திலே தமிழினத்துக்கு நடந்த பல விரோத செயல்களை பல ஊடகங்கள் உண்மையைக் கொண்டுவர பட்டவேளையிலே அந்த காலத்தில் இருந்த அரசின் அடக்கு முறையால் ஊடகம் எல்லாம் தணிக்கை செய்யப்பட்டிருந்தது

அப்போது தமிழ் மக்களுக்கு வடகிழக்கிலே நடந்த கொடூர இனப்படுகொலைகள் கொடூர சம்பவங்கள் அச்சுறுத்தல்கள், காணாமல் போகப் செய்யப்பட்ட விடயங்களை உடனுக்கு உடன் அறிவிப்பதற்கு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த வேளையிலே மாமனிதர் குமார் பொன்னம்பலம் கொழும்பிலே சிங்கள கோட்டையிலே துணிச்சலுடன் தமிழ் மக்கள் ஒரு நீதிக்காக போராடுகின்றனர்.

தமிழ் மக்கள் ஒரு அடக்குமுறைக்குள் உட்படுகின்றர்கள் அதனை எதிர்த்து தான் தமிழீழ விடுதலைப் புலிகள் போராடுகின்றார்கள். என அந்த ஆயுத போராட்டதை உலகத்துக்கு சர்வதேச ஊடகங்கள் ஊடாக நியாயப்படுத்தி தெரியப்படுத்தி வந்தார். இவ்வாறு செயற்பட்டமையினல் அவர் சந்திரிக்கா அமையார் காலத்தில் அவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அன்று குமார் பொன்னம்பலம் நீங்கள் யுத்தத்தை நிறுத்தாவிட்டால் இந்த நாடு எதிர்காலத்தில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் தள்ளப்படும் நாட்டுமக்கள் நெருக்கடிக்குள் தள்ளப்படுவார் என கணித்து அன்று கூறினார். அப்போது  இருந்த அரசியல் தலைவர்கள் அவரின் கருத்தை நிராகரித்தனர்.

தமிழ் மக்களுடைய இன விடுதலைப் போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் சிங்கள மக்கள் போன்று தமிழ் மக்களும் சமமாக வாழவேண்டும் அதற்காகத்தான் போராடுவதாக அன்று குமார் பொன்னம்பலம் அவர் கூறினார் அவ்வாறு பல புத்திஜீவிகள் நியாயப்பாட்டை சொல்லும் போது படுகொலை செய்யப்பட்டனார்.

எனவே அந்த காலத்திலே ஒரு இனத்தை குறிவைத்து அவர்கள் போராடியதால் இன்று இந்த நாடு அதலபாதாளத்திற்கு போயுள்ளது இந்த விடையங்களை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

பொதுவாக இலங்கை மீது கண்வைத்துள்ள நாடுகள் உங்களுடைய நாடுகளின்; நலன்கருதி கொண்டு இந்த இலங்கை தீவிலே நீங்கள் நினைத்தவாறு அரசியலை நடாத்துவதாக இருந்தால் இதற்கு வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் ஒருபோதும் ஒத்துழைக்கமாட்டோம.;

இங்கே சீனா கால் ஊன்றி இருக்கின்றது சீனாவை தடுக்கும் முகமாக இந்திய தங்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல கூட்டுக்களையும் பல அரசியல் தலைவர்களையும் தங்களுக்கு ஏற்ற மாதிரி பாவித்து ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நலனை பாதிக்கின்ற வகையில் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

எனவே நீங்கள் உங்களுடைய முகவர்களை பாவித்து பல கூட்டுக்களையும் பல ஒப்பந்தங்களையும் செய்து அதன் மூலம் மக்களை ஏமாற்றுகின்ற பகல்கனவை நீங்கள் உடனடியாக நிறுத்தவேண்டும்.

எங்களுடைய மக்களின் நியாயமான போராட்டத்தை கருத்தில் கொள்ளாவிட்டால் நிச்சயமாக உங்களுடைய நாட்டிற்கு சீனா அல்ல தெற்காசியாவிலுள்ள பல நாடுகள் உங்களை குறிவைக்கும்.

இந்த நாடு உண்மையிலே சீனாவின் கடன் எல்லைக்குள் அகப்பட்டிருக்கின்றது சீனா வடக்கு கிழக்கில் கால் ஊண்ற எத்தனிக்கின்றது. நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல இந்தியாவின் செல்ல பிள்ளைகளாக நாங்கள் யோசிக்கின்றோம் ஆனால் நீங்கள் அவ்வாறு இல்லை நீங்கள் எங்களை பகடைக்காயாகவும் அடிமைகளாகவும் பாவிக்க எத்தனிக்கின்றீர்கள்

எனவே  அந்த விடையத்தை கையைவிட்டு நீங்கள் கடந்த 70 வருடகாலமாக  போரடிவருகின்ற எமது இந்த மக்களை அடிமைகளாக்க நினைப்பதை கைவிட்டுவிட்டு தமிழ் மக்கள் விரும்புகின்ற வடகிழக்கு இணைக்கப்பட்டு ஒரு சுயநிர்ணயத்துடன் அங்கீகரிகப்பட்ட இறையான்மையுள்ள ஒரு தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் முகமாக நீங்க அரசியல் நடவடிக்கையை எடுக்கவேண்டும்

மாறாக ஓற்றை ஆட்சி அரசியல் அமைப்புக்கு எதிராக போராடிவருகின்ற வடக்கிழக்கு தமிழ் மக்களை   அதனை முடக்கும் விதமாக நீங்கள் செயற்படுவதாயின்  மக்கள் புரட்சி வெடிக்கும். அதேவேளை எங்கள் அரசியல் அபிலாiஷகளுக்கு உங்களைத்தாண்டி உலகத்தில் எங்களுடைய கருத்தை ஏற்றுக் கொண்ட நாடுகளுக்கு தெரியப்படுத்துவோம்

இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது வெறும் உங்களுடைய நலுனுக்காக இலங்கையை உங்கள் கட்டுப்பாட்டிற்கு வைத்திருக்க போடப்ட்ட ஒப்பதந்தம் தமிழ் மக்கள் நலன்கருதி நீங்கள் போடவில்லை 34 வருடங்களுக்கு மேலாக அன்றே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒப்பந்தம். எனவே மீண்டும் நீங்கள் பழையதை தூக்கி கொண்டுவந்து தமிழ் மக்களை அழிவு பாதைக்கு இட்டுச் செல்ல நீங்கள் எத்தனிக்க கூடாது  என்றார்.

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் (புதன்கிழமை ) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கடந்த மாதம் 19 ஆம் திகதி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக சட்டத்தரணி எஸ்.டிணேசன் தெரிவிக்கையில், ”குறித்த  12 இந்திய மீனவர்களும் இன்றைய தினம் (புதன்கிழமை ) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.இவர்களில் சிறுவர் ஒருவரும் அடங்குகின்றார்.

இதன் போது குறித்த மீனவர்களுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு கடற்தொழில் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதன் போது குறித்த மீனவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் ஒரு வருட சாதாரண சிறை தண்டனை வழங்கப்பட்டதோடு, குறித்த சிறை தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் குறித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த மீனவர்களில் சிறுவர் ஒருவர் உள்ளமையினால் நிபந்தனையின் அடிப்படையில் எச்சரிக்கப்பட்டு, குறித்த சிறுவன் தனது கல்வியை தொடர வேண்டும் என நீதவான் அறிவுறுத்தியதோடு குறித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஆரியகுளத்தின் உரிமையை உறுதிப்படுத்துங்கள் மாநகர ஆணையாளருக்கு ஆளுநர் கடிதம்!

யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும்  அதிகாரம் மாநகர சபைக்குக் கிடையாது என சாரப்பட – மாநகர சபையை அச்சுறுத்தும் பாணியில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

யாழ். மாநகர முதல்வரின் ஏற்பாட்டில் தனியார் நிதிப் பங்களிப்புடன் ஆரியகுளம் அழகுபடுத்தப்பட்டு, பொழுதுபோக்குத் திடலாகப் பொது மக்களின் பாவனைக்குத் திறந்து விடப்பட்டிருந்தது.

ஆரியகுளப் புனரமைப்புப் பணிகளின் போது, மதச் சின்னங்களை நிறுவுவதில் இழுபறி நிலை தோன்றியிருந்த நிலையில், எந்தவொரு மத அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான கட்டமைப்பெதனையும் அமைப்பதில்லை என மாநகர சபையில் தீர்மானம் இயற்றப்பட்டிருந்தது.

எனினும், அரசியலமைப்பின் படி மத அனுட்டானங்களைத் தடுக்கும் அதிகாரம் சபைக்கு இல்லை என சுட்டிக் காட்டியிருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, ஆரியகுளம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்டது தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உரித்து ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறும் மாநகர ஆணையாளரைப் பணித்திருக்கிறார்.

மேலும்,  சமயத்தைப் பின்பற்றும் உரிமை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்களுக்கு மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் தன்னைச் சந்திப்பதற்கு ஆலோசனை வழங்குமாறும் அந்தக் கடிதத்தில் ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு ஏற்படவுள்ள நிலை – பிரித்தானிய ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

2022ஆம் ஆண்டில் இலங்கை திவாலாகும் அபாயம் உள்ளதாக பிரித்தானிய பத்திரிகையான தி கார்டியன் தெரிவித்துள்ளது.

அன்னிய கையிருப்பு வறண்டு கிடப்பதாலும், வரலாறு காணாத பணவீக்கம் காரணமாகவும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நான்கு இலங்கையர்களில் ஒருவர் கூடிய விரைவில் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள பெரும்பான்மையான குடும்பங்கள் தமது வருமானத்திற்கான அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் பாரிய பொருளாதார சவாலை எதிர்நோக்கி வருவதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தமிழினத்திற்கு எதிராக வாங்கிய கடன் இலங்கையை சர்வதேசத்திடம் பிச்சையெடுக்க வைத்துள்ளது : சுரேஷ் க.பிறேமச்சந்திரன்

சிங்கள-பௌத்த மேலாதிக்க வாதத்தின் மூலம் ஆட்சியை கைப்பற்றித் தக்க வைத்துக்கொள்ளுவதற்காக இலங்கையின் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகவே இன்று மக்களின் ஆணையை மீறி சர்வதேசத்திடம் அடகு வைப்பதற்கும் பிச்சையெடுப்பதற்கும் இலங்கையைத் தள்ளியுள்ளது என்று இலங்கையின் இன்றைய பொருளாதார நிலைகுறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் இன்றைய பொருளாதார நிலைகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மிக மோசமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது என்பதை நாட்டு மக்களும் சர்வதேச சமூகமும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். ஆளுந்தரப்பு அமைச்சர்களே மக்களை அச்சுறுத்தும் வகையிலும் எச்சரிக்கும் வகையிலும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குறித்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

எத்திரணியிலிருக்கக்கூடியவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு புதிய தேர்தலுக்குப் போகுமாறு வலியுறுத்துகின்றார்கள். ஆனால் அரசாங்கம் பொருளாதார வீழ்ச்சிக்கு கோவிட்-௧௯ நோய்த்தொற்று தான் காரணம் என்று ஒரே மந்திரத்தையே உச்சாடனம் செய்கிறது.

ஆனால் உண்மையான காரணம் அது மாத்திரம் தானா? இந்த நாட்டில் கடந்த முப்பது ஆண்டுக்கால அழிவு யுத்தத்திற்கு இவர்கள் செலவிட்ட ஆயிரக்கணக்கான பில்லியன் டொலர்கள் பொருளாதார வளர்ச்சிக்காகப் பாவிக்கப்பட்டிருந்தால் இந்த நாடு சொர்க்க புரியாக மாறியிருக்கும்.

இதற்கு மாறாக இனவாதமும் மேலாதிக்க சிந்தனையும் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினைக்கு அழிவு யுத்தத்தையே அரசாங்கம் தீர்வாகக் கொண்டிருந்தது. இலங்கை அரசு தமிழ் மக்கள் மேல் கட்டவிழித்துவிட்ட யுத்தத்தால் அவர்கள் சாதாரணமாகப் பாதிக்கப்படவில்லை. பலபத்தாண்டுகளாக அவர்கள் அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையின்கீழ் வாழ்ந்துவந்தார்கள்.

இதன் உச்சக்கட்டமாக இறுதி யுத்த காலப்பகுதியில் தாலிக்கொடியை விற்று பால்மா வாங்கியதும், பொது இடங்களில் கஞ்சித்தொட்டியை வைத்து மக்களுக்குக் கஞ்சி ஊற்றியதும், சிறிய சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்த வேண்டிய காயங்களை மருந்தின்றியும் உரிய மருத்துவமனைகளின்றியும் அங்கங்களை அறுத்தெறிந்ததும் நாங்கள் அனுபவித்த சொல்லொணா துன்பங்கள்.

இன்று அதே நிலை ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் வந்துவிடுமோ என்று நாம் கவலையடைகின்றோம். இலங்கையின் சமகால பொருளாதார வீழ்ச்சியென்பது வெறும் கோவிட் இனால் மட்டும் ஏற்பட்டது அல்ல. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து உள்நாட்டில் ஆதிக்க சக்திகள் ஏற்படுத்திக்கொண்ட இனவாதங்களும் ஒடுக்குமுறைகளும் சமச்சீரற்ற பொருளாதார முன்னெடுப்புகளும் இதை வறிய நாடு என்ற பட்டியலுக்குள்ளேயே வைத்துக்கொண்டிருந்தது. யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னரும் இன்று வரையில் பாதுகாப்பு செலவீனம் என்பது யுத்த காலத்திலும் பார்க்க அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியபோது யுத்தத்திற்காக வாங்கிய கடன்களை அடைக்க வேண்டியிருக்கிறது என்றும் அதற்காகவே பாதுகாப்புச் செலவீனம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது. யுத்தம் முடிந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் யுத்தத்திற்காக வாங்கிய கடன்கள் அடைக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்வியும் எழுகின்றது.

இலங்கை போன்ற சிறிய நாட்டில், ஏறத்தாழ மூன்று இலட்சம் இராணுவமும், இதனைவிடவும் கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் ஆளணியும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஆளும் தரப்போ எதிர்த்தரப்போ இத்தகைய செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று எப்பொழுதாவது பேசியிருக்கின்றார்களா?

உலகநாடுகள் அனைத்திலும் கடன் பெறுவதற்கான முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. கடன் வாங்கி, வாங்கிய கடனை கட்டுவதும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்காகக் கடன் வாங்குவதுமாகத்தான் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு இருக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதா வேண்டாமா என்ற பட்டிமன்றமும் நடைபெற்றுவருகின்றது.

இப்பொழுது பங்களாதேஷ், இந்தியா, சீனா தொடக்கம் உலக நாடுகள் முழுவதிலும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி அலைகிறார்கள். புத்த பகவான் பிக்குகள் பிச்சைப் பாத்திரம் ஏந்தியே மக்களிடமிருந்து உணவைப் பெறவேண்டும் என்று போதித்துள்ளார். இன்று பௌத்த மேலாதிக்கத்தில் திளைத்திருக்கும் இலங்கை அரசாங்கம் ஒட்டு மொத்த மக்களையும் பிச்சைப்பாத்திரம் ஏந்த வைத்துள்ளது.

இன்று எல்லா வகையிலும் தோல்வியுற்ற ஒரு அரசாங்கமாக மாத்திரமல்லாமல், நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான எத்தகைய வழியுமின்றி தவிக்கும் வீழ்ச்சியடைந்த ஒரு அரசாங்கமாகவும் இன்றைய அரசாங்கம் மாறியிருக்கிறது. கடந்த ரணில்-மைத்திரி ஆட்சிக்காலத்தில் ‘உங்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள் நாங்கள் நாட்டை பொருளாதார ரீதியில் வளப்படுத்துகிறோம்’ என்று சவால் விட்டிருந்தார்கள்.

இன்று அவர்களே மக்கள் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். இவர்களால் நாட்டை சோமாலியாவைவிட மோசமான நிலைக்குத் தள்ளியதைத் தவிர வேறு எதைச் சாதிக்க முடிந்தது? இந்த நாட்டை வளப்படுத்த வேண்டும், பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்று கருதினால் பல்வேறுபட்ட மாற்றங்களைச் செய்வதற்கு இலங்கை அரசும், எதிரணியினரும் தயாராக இருக்க வேண்டும்.

முதலாவதாக இது சிங்கள பௌத்த நாடு என்ற மேலாதிக்க சிந்தனையை விடுத்து, அனைத்து மக்களும் சமத்துவமாக வாழ்வதற்கான அடிப்படைகளை உருவாக்க வேண்டு;ம். இரண்டாவதாக இனங்களிடையேயும், மதங்களிடையேயும், உழைக்கும் வர்க்கத்தினரிடையேயும் மோதல்களை உருவாக்கி அவற்றினூடாக வாக்குகளைக் கபளீகரம் செய்யும் நிலைவரங்களைக் கைவிட வேண்டும்.

இந்த நாட்டில் இருக்கக்கூடிய தேசிய இனங்கள் தங்கள் அபிவிருத்திகளைத் தாமே செய்யக்கூடிய வகையில் அவர்களுக்கான அதிகாரங்களை வழங்க வேண்டும். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் தடையாக இருக்கக்கூடிய முப்படைகளின் அதிகரிப்பை நிறுத்துவதுடன் அவற்றை இயன்றவரை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

இலங்கையின் வெளி விவகாரக் கொள்கைகளை நாட்டு நலனுக்கேற்பவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவகையிலும் உருவாக்கிக் கொள்ள வேண்டுமே தவிர, தரகுப் பணம் வருகிறதே என்பதற்காக நாட்டை வல்லரசுகளிடம் விற்றுவிடக்கூடாது. ஆகவே இலங்கையின் பொருளாதாரத்தைத் திட்டமிடுபவர்கள் யாராக இருந்தாலும், மேற்கண்ட விடயங்கள் அனைத்தும் கவனத்தில் எடுக்கப்பட்டு திட்டங்கள் தயாரிக்கப்படாவிட்டால், உலக நாடுகளிடம் பிச்சை எடுப்பதென்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.

ஆட்சி மாறவேண்டும், பொருளாதாரம் வளம்பெற வேண்டும் என்பதிலும் நாங்கள் ஒருமித்த கருத்துள்ளவர்களாகவே இருக்கின்றோம். வரப்போகின்றவர்கள் எவ்வாறு இதனை மாற்றியமைக்கப்போகின்றார்கள் என்பதுதான் கேள்வி. வெறுமனே ஆட்சி மாற்றம் மட்டும் பிரச்சினைக்குத் தீர்வாகாது. இந்த நாட்டு மக்கள் பசி, பட்டினி, பஞ்சம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றப்படவேண்டும்.

அதற்கு இன, மத, மொழி வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைய வேண்டும். நாட்டில் இன்று எரிவாயு தட்டுப்பாடு, எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு, அடுத்துவரும் வாரங்களில் எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்படக்கூடிய சூழல், அதனால் ஏற்படக்கூடிய மின்சார வினியோகத் தடை, தற்போது சமையல் எரிவாயுவிற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய்க்கும் வரப்போகும் தட்டுப்பாடு, போன்றவற்றால் அரச ஊழியர்களும் தனியார் துறை ஊழியர்களும் உரிய நேரத்திற்குப் பணிக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்படப்போகின்றது. இந்த அபாயங்களைப் புரிந்துகொண்டு சகல அரசியல் கட்சிகளும் செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பிறந்திருக்கும் புதுவருடத்திலாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்- அருட்தந்தை மா.சத்திவேல்

அரசியல் கைதிகளின் குடும்பங்கள் அனுபவிக்கும் துன்பங்களில் இருந்து மீட்சி அளிக்கவும், இன நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் கருதி பிறந்திருக்கும் புதுவருடத்திலாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் இலக்கு ஊடகத்தில் இருந்து தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கரு த்து தெரிவிக்கையில்,

தென் ஆபிரிக்காவின் நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ,வெள்ளை மற்றும் கறுப்பு இன மக்களுக்கு இடையில் சமாதானத்தையும், பாதிக்கப்பட்ட கறுப்பு இனத்தவருக்கு அரசியல் நீதியையும், இரு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த உழைத்து வெற்றி கண்ட பேராயர் டெஸ்மன்ட் டுட்டு அவர்களின் இறுதி மரணச்சடங்கு பிறந்திருக்கும் புது வருடத்தின் முதல் நாளில் நடந்திருக்கிறது. அவர் சர்வதேசத்துக்கு விட்டு சென்ற நல்லிணக்க செயற்பாட்டைப் புதைக்கக் கூடாது. அது தொடர்வதற்கான செயற்பாட்டில் இலங்கை ஆட்சியாளர்கள் நாட்டம் கொண்டுள்ளனர் என்பதற்கு அடையாளமாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அவருக்கு செய்யும் கௌரவமாக அமைவதோடு அரசியல் நீதியை தேடிக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். அரசியல் தீர்வுக்காக சர்வதேசத்தை நோக்கி தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.

புத்தாண்டில் இராணுவம் வகிக்கப்போகும் வகிபாகம் என்ன? ஆபத்தான சமிக்ஞைகள் என்கிறார் கலாநிதி தயான்

புத்தாண்டில் இலங்கை அரசியல், மற்றும் கட்டமைப்புக்களில் இலங்கை இராணுவம் வகிக்கப்போகும் வகிபாகம் தொடர்பான ஆபத்தான சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ளன என்று கலாநிதி தயான் ஜயத்திலக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

1931 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயக நாடாக அடையாளப்படுத்தி வரும் இலங்கையில் இராணுவம் வெளிப் படுத்தியுள்ள சமிக்ஞைகள் 2022 ஆம் ஆண்டு ஆபத்தான நிலைமைகளை நோக்கியதாக அமைந்துள்ளன. புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தினது நாட்காட்டியும், நாட்குறிப்பும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட் டவர்களுக்கு பகிரப்பட்டது. இதில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் புகைப்படம் பொறிக் கப்பட்டு ஆங்காங்கே பல்வேறுபட்ட பொன்மொழிகளும், பழமொழிகளும் பதிப்புச் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, பழமொழிகள் மற்றும் பொன்மொழிகள் சார்லஸ் டிக்கன்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்க ளினது பொன்மொழிகளும் காணப்படுகின்றன. ஆனால் வழக்கத்துக்கு மாறாக, “இலங்கை இராணுவம் வளமான மற்றும் நிலையான தேசத்தை உரு வாக்கி பராமரிக்கும் திறன் கொண்டது’ என்ற வாசகம் பதிப்புச் செய்யப்பட்டுள்ளது. இவ்விதமான வாசகத்தை சீனவோ, ராஷ்யாவோ வெளிப்படுத்தவில்லை. குறி;ப்பாக இராணுவமான மக் கள் சீனப் படையோ அல்லது ரஷ்யா இராணுவமோ கூட வெளிப்படுத்தியது கிடையாது.

அவ்வாறிருக்கையில், இலங்கை இராணுவம் முதன்முதலாக தேசத்தை பாதிப்பது உள்ளிட்ட விட யத்தைக் குறிப்பிட்டுள்ளது. இதுவரையில் இவ்வித மாக பிரஸ்தாபிக்காத இராணுவம் இப்போது தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதன் பின்னணியை கூர்ந்து அவதானிக்க வேண்டியுள்ளது. அதுநேரம், கிளிநொச்சிக்குச் சென்ற இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அங்கு புதிதாக நிறுவப்பட்ட கோப்ஸ் கட்டமைப்பினரைச் சந்தித்தபோது பசுமை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் அது குறித்த விழிப்புணர்வுகளை விவசாயிகளுக்கு வழங்கு வதற்கும், இராணுவம் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளதோடு ஜனாதிபதி கோட் டாபய ராஜபக்வின் இலக்கை நோக்கி நகர்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் உரை யாற்றி உள்ளார்.

இவ்விதமான நிலைமைகள் எல்லாம் அடுத்த ஆண்டு இராணுவம் எவ்விதமாகச் செயற்பட போகின் றது. அதன் வகிபாகம் என்ன என்ற சமிக்ஞைகளை தெளிவாக வெளிப்படுத்துவனவாக உள்ளது. அதே நேரம், ஜனநாயக நாடொன்றில் இராணுவத்தின் இவ் விதமான பிரதிபலிப்புக்கள் மிகவும் ஆபத்தானவை“ என்றார்.

Posted in Uncategorized

கறைபடிந்த வரலாற்றுத் தவறை மேற்கொள்ளத் துணைபோக வேண்டாம் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி

இனப்படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை மண்ணில் இதுவரை காலமும் தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், பட்டத்திருவிழா மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வந்திருந்தது.

வழமைக்கு மாறாக, இந்த ஆண்டு தமிழின விரோத சக்திகளின் வழிநடத்தலில், தமிழினத்தின் வாழ்வுரிமையைச் சிதைத்த, இனவழிப்பு அரசின் பிரதிநிதிகளை விருந்தினர்களாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரச முகவர்களின் சதிமுயற்சிக்குள், ஏற்பாட்டுக் குழுவினரை சிக்க வைத்துள்ள இந்த செயற்பாடானது தமிழின பண்பாட்டு அழிப்பின் தொடர் முயற்சி என்றும் அவர்கள் சாடியுள்ளனர்.

தமிழர் வரலாற்றில் பின்னிப்பிணைந்த பாரம்பரிய நிகழ்வான பட்டத்திருவிழாவில், இவ்வாறான கறைபடிந்த வரலாற்றுத் தவறை மேற்கொள்ளத் துணைபோக வேண்டாம் என ஏற்பட்டு குழுவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.