மைச்சரவை அரசியலமைப்புக்கு முரணானது – ஒமல்பே சோபித தேரர்

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அரசியலமைப்புக்கு முரணானது என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தின் கீழ் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்யாதவர்கள் தமது பதவிகளில் செயற்பட முடியாது என குறிப்பிட்டார்.

தற்போதைய நிதியமைச்சர் மாத்திரமே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் பதவிப்பிரமாணம் செய்துள்ளதாக தேரர் குறிப்பிட்டார்.

எனவே புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் சத்தியப் பிரமாணம் செய்யாதவர்களுக்கு தமது பதவிகளில் செயற்பட அதிகாரம் இல்லை எனவும் சோபித தேரர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கெரவலபிட்டிய மின்னுருப்பதி நிலையம், துறைமுக நகர ஒப்பந்தங்கள் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை வெளிநாட்டுக்கு கையளித்தமை உள்ளிட்ட அனைத்தும் அரசியலமைப்புக்கு முரணானவை என குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

இந்தியாவில் இருந்து நாங்கள் இங்கு வரவில்லை – பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன்

இந்தியாவிலிருந்து நாங்கள் இங்கு வரவில்லை. எங்களிலிருந்துதான் இந்தியாவில் சென்று திருமணம் செய்த வகைகளால் எங்களிற்கும் இந்தியாவிற்கும் அந்த தொப்புள் கொடி உறவு உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய ஆண்டியே புதிய இலட்சினை மற்றும் புதிய கொடியுடன் ஆண்டினை தொடங்கியிருக்கின்றீர்கள். ஒரு இனத்தினுடைய கொடி என்பது மிக முக்கியமானது. ஒரு இனம் தேசிய இனமா அல்லது இன குழுவா அல்லது அவர்கள் வெறுமனே பேசுகின்ற சிறிய அளவிலான குழுவாகவே புாய்விடுவார்களா என்றெல்லாம் உலகத்திலே பெரும் ஆய்வுகள் உள்ளது.

இரண்டாவது உலகப்போர் முடிந்ததற்கு பிற்பாடுதான் உலகத்தினுடைய சுயநிர்ணய உரிமை தொடர்பில் பேசப்பட்டது. முக்கியமாக ஒரு நாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் உள்ள நாடாக இருந்தால் அந்த நாட்டுக்குள் இன் சுயவுரிமை உள்ள நாடு பிரிய முடியாது. ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றிருந்தால் அதுதான் அவர்களின் உயநிர்ணய உரிமை.

அவர்களின் தாயகம் அதுதான். அந்த நாட்டுக்குள்ளேயே அவர்கள் அடங்கிக்கொள்ள வேண்டும். இது உலக பந்திலே பெரும் சர்ச்சைகளை கொண்டு வந்தது. பல்வேறுபட்ட மொழி பேசுகின்ற மக்கள் வாழ்கின்ற, பல காலாச்சாரம் உள்ள, பல தேசிய இனங்களை கொண்ட நாடுகள் உலகத்தில் உள்ளது.

இலங்கையில் மரபுவழி தாயக அடைப்படையில் இனத்தின் அடையாளத்தை கொண்டவர்கள் தமிழர்கள். எங்களிற்கான மரபுவழி தாயகம், பூர்வீக வரலாற்றுவழி நிலம் எங்களிற்கு உண்டு. நாங்கள் வந்தேறு குடிகள் அல்ல. நாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் அல்லது இந்திய தொப்புள்கொடி உறவுகள் என சிலர் வித்தியாசமாக பார்க்கின்றார்கள்.

எங்களிலிருந்துதான் இந்தியாவில் சென்று திருமணம் செய்தவகைகளால் எங்களிற்கும் இந்தியாவிற்கும் அந்த தொப்புள் கொடி உறவு உள்ளது. ஈழத்து மண்ணிலே நாங்கள் பஞ்ச ஈச்சரங்களை வைத்து இல்கையில் முதல் தோன்றிய மூத்த குடிகளாக நாங்கள் வாழ்ந்தவர்கள்.

ஆகவே எங்களிற்கான இந்த நில அடையாளம், நாங்கள் இன்று பேசுகின்ற செம்மொழியும் எமக்கான அடையாளமாகும். உலகத்தில் இன்று வாழுகின்ற எல்லா மொழிகளிற்கும் தாய் மொழியான 6 மொழிகளில் மெ்மொழியான தமிழ் மொழியும் உள்ளது. அந்த மொழியை அடிப்படையாகக்கொண்ட இனம் நாங்கள்.

ஆகவே எங்களிற்கான மொழி அடையாளம் நிலையானதும், நீடித்து நிலைக்ககூடியதும், அழிக்கப்படமுடியாததுமான மொழி அடையாளத்தைக்கொண்டவர்கள் நாங்கள். எங்களிற்கான உடை, பண்பாடு, காலாச்சாரம், தொடங்குகின்ற முறை, பண்டிகைகளை கொண்டாடுகின்ற முறை எல்லாவற்றிலும் எமக்கு ஒரு ஒழுங்கு முறை உண்டு.

அந்த ஒழுங்குமுறைகளு்மு, நெறிப்படுத்தலும் எங்களுக்கென்றொரு அடையாளமாக கொள்ளப்படுகின்றது. அதனால்தான் மொழி, பண்பாடு கொண்ட தமிழ்த் தேசிய இனம் இந்த மண்ணிலே ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கின்றது.

அதே அடையாளம் கரைச்சி பிரதேச சபை இழந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நீங்கள் இன்று உங்களுக்கென்று ஒரு கொடியை நிலையானதாக வரைந்திருக்கின்றீர்கள். கொடியோடு சேர்ந்து உங்களிற்கான இலச்சினை திருத்தப்பட்டிருக்கின்றது. ஒரு நிலையான இலச்சினை வரையப்பட்டிருக்கின்றது. குறித்த பணி மிகப்பெரிய உள்ளதமான பணி என அவர் இதன்போது தெரிவித்தார்.

பைடனுக்கான தமிழர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்

சீனர்களைத் தீவில் இருந்து வெளியேற்றும் வகையில், தமிழர்களின் இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவுடன் ஒத்துழைக்குமாறு பிரதமர் மோடியிடம் பேசுமாறு பைடனுக்கான தமிழர்கள் அமைப்பினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கடிதத்தின் நகல் இதோ:

Re: வடகிழக்கு இலங்கையில் தமிழர்களின் இறையாண்மை, சாத்தியமான சீன அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும்.

டிசம்பர் 28, 2021

முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் இல்லம்
25/9, சித்தரஞ்சன் சாலை
செனோடாப் சாலை,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600018, தமிழ்நாடு, இந்தியா

அன்பான மதிப்புக்குரிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,

உலகிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு தமிழ்த் தலைவராக திரு.ஸ்டாலின், தமிழர் தாயகமான வடகிழக்கு இலங்கையில் சீனர்கள் சீனக் ஊடுருவல் நிறுத்த மோடியைப் பயன்படுத்த வேண்டும்.

இலங்கையில் துன்பப்படும் தமிழர்களுக்கு வழிகாட்டவும் உதவவும் இலங்கையில் உள்ள தமிழர்கள் தமிழ்நாட்டின் தலைமையை நம்பியிருக்கிறார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்குத் தேவைப்படும்போது பலமுறை உதவியதை தமிழர்கள் மறப்பதில்லை.

அண்மையில் கொழும்புக்கு அருகில் மீட்கப்பட்ட துறைமுக நகரத்தை கையகப்படுத்திய சீனர்கள் இலங்கையில் காலடி எடுத்து வைத்துள்ளனர். அதற்கு முன்னர் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீது கட்டுப்பாட்டை அவர்கள் பெற்றனர். இப்போது இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் அமைந்துள்ள மூன்று தீவுகளில் சீனர்கள் தங்களை உட்பொதித்து, யாழ்ப்பாணத்திலுள்ள பருத்தித்துறையைக் கைப்பற்றுவோம் என்று அச்சுறுத்தியுள்ளனர்.

சீனர்கள் தமிழ்நாட்டிலிருந்து வெகு தொலைவில் இல்லை, நெடுந்தீவில் 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சீனர்கள் தமிழ்நாட்டிற்கும் முழு தென்னிந்தியாவிற்கும் உளவியல் அச்சுறுத்தலையோ, உடனடியான பாதிப்பையோ, ஆபத்தையோ அல்லது வலியையோ கொண்டு வருவார்கள். இது பொருளாதாரத்தையும் அன்றாட அமைதியான வாழ்க்கையையும் பாதிக்கும்.

சீன அரசாங்கம் இரக்கமற்ற மற்றும் சர்வாதிகாரமானது. இந்த நேரத்தில் சீனர்கள் தமிழர் பகுதிகளின் மறுபக்கம், சிங்களவர்கள் பகுதிக்குள் தள்ளுவது நல்லது.

வடகிழக்கில் இருந்து சீனர்களைத் தள்ளிவிடுவதன் மூலம், வடகிழக்கு இந்தியாவிற்கும் சிங்கள-சீன இலங்கைக்கும் இடையில் ஒரு இடையகமாக மாறும். இதன் மூலம் இந்தியா நேரடியாக தங்கள் நிலப்பகுதியை பாதுகாக்க முடியும்.

அதைச் செய்ய, வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் இறையாண்மையை அங்கீகரிக்க அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும்.

தமிழர் தாயகத்தை இந்தியா அங்கீகரிப்பதன் மூலம் போர்த்துக்கேய படையெடுப்பிற்கு முன்பிருந்த 1619ஆம் ஆண்டிற்குச் சென்றுவிடுமோ என்ற அச்சம் தீர்ந்துவிட்டது என்ற முடிவுக்கு சிங்களம் வந்துவிடும்.

மகா வம்சம், சிங்களப் புராணம், சிங்கள மூதாதையர்கள் காட்டு விலங்கு சிங்கங்களால் பிறந்தார்கள் என்று கூறுகிறது. தமிழர்கள் பூர்வீகக் குடிகளாக இருந்தபோது அவர்களின் மூதாதையர்கள் இந்த தீவுக்கு வந்தாலும், புதிதாக குடியேறியவர்களுக்கு தமிழர்கள் தீங்கு செய்யவில்லை என்றாலும், இந்த தீவு சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்று அதே புராணம் சிங்களவர்களுக்கு கூறியது.

இளவரசர் விஜன் தீவுக்கு வருவதற்கு முன்பு தமிழர்கள் இருந்தார்கள் என்பதை நிரூபிக்க, கிமு 177 இல் இரண்டு தமிழ் மன்னர்கள் அநுராதபுரத்தில் ஆட்சியைக் கைப்பற்றி இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தனர் என்பதற்கு ஒரு வரலாற்று சான்று உள்ளது, அதைத் தொடர்ந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு மற்றொருவர் ஏலரா. மிக நீண்ட காலம் – நாற்பத்தி நான்கு ஆண்டுகள்[3] அதிகாரத்தில் தன்னைத் தக்க வைத்துக் கொண்டவர்.

எனவே இந்த மகா வம்சம், சிங்களப் புராணங்களே தமிழர்களின் இறையாண்மையை சிங்களவர்கள் விரும்பாததற்குக் காரணம்.

இலங்கையில் உள்ள தமிழர் பிரதேசங்களில் சீன படையெடுப்பு இறுதியில் தமிழகத்திலும் பரவும். சீனர்கள் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம், அவர்கள் யாரையும் வாங்க முடியும்.

இது தமிழ்நாட்டின் தமிழ் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் அழித்துவிடும். சீனப் படையெடுப்பு சீன மக்களை காளான்கள் போல் பெருக்கியது. அவற்றை அகற்றுவது கடினமாக இருக்கும்.

எனவே, தமிழர்களின் இறையாண்மைக்காக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தவறினால், இந்தியா எதிர்கொள்ளும் ஆபத்து குறித்து முதல்வர் ஸ்டாலின் புதுடெல்லி சென்று விளக்கமளிக்க வேண்டும், இது தீவில் நடக்கும் அனைத்து சீன நாடகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்.

தமிழ் ஈழமும், தமிழகமும் இந்திய அரசியல் ஸ்திரத்தன்மைக்கும், இறையாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும். தமிழீழம் கொசோவோவின் மாதிரியாக இருக்கும், இந்திய அரசியலில் ஒருபோதும் தலையிடாது, தமிழர்களின் இறையாண்மையைப் பெற அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றினால் நாங்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக இருப்போம்.

செர்பியாவில் இருந்து கொசோவோ சுதந்திரம் பெற்ற பிறகு, கொசோவோவில் உள்ள அல்பேனியர்களும், அல்பேனியாவில் உள்ள அல்பேனியர்களும் தங்களைச் சுற்றியுள்ள எந்த நாட்டையும் அச்சுறுத்தியது இல்லை, மேலும் அல்பேனியாவுடன் இணைந்து பெரிய அல்பேனிய அரசை உருவாக்க முயற்சிக்கவில்லை என்பதற்கு ஒரு உதாரணத்தை பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.

ஒரு புதிய நாடு எப்போதும் எல்லைகளைத் தீர்ப்பதற்கு ஒரு சிறிய போர் இருக்கும். தமிழீழம் மற்றும் சிங்களர் இலங்கைக்கும் இதேதான் நடக்கும்.. இந்தப் போர் சீனர்களை இலங்கையை விட்டு துரத்தும். தமிழ்ப் புலிகள் சிங்களவர்களுடன் போரிட்ட போது இலங்கைத் தீவிற்குள் எந்த நாடும் வரவில்லை என்பது நம் அனைவருக்கும் நினைவிருக்கிறது.

தமிழ் ஈழத்தை அங்கீகரித்து சீன படையெடுப்பில் இருந்து இந்தியாவை காக்க முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்குவார் என நம்புகிறோம்.
நன்றி.

உண்மையுள்ள,
பைடனுக்கான தமிழர்கள்

சுட்டுக்கொல்லப்பட்ட 5 மாணவர்களின் 16 வது நினைவஞ்சலி தினம்

2006 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக சுட்டுக்கொல்லப்பட்ட 5 மாணவர்களின் 16 வது நினைவஞ்சலி தினம் நேற்று (02) மாலை அனுஷ்டிக்கப்பட்டது.

திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக காந்தி சிலை சுற்று வட்டத்தில் இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட உணர்வாளர்களின் பங்களிப்புடன் அமைதியான முறையில் விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் 5 மாணவர்கள் உள்ளடங்களாக 7 மாணவர்கள் சுடப்பட்டு 5 மாணவர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்த நிலையில் 2 மாணவர்கள் உயிர் தப்பியிருந்தனர்.

அன்றைய நாள் திருகோணமலை மண்ணில் கருப்பு தினமாக அனுஷ்டிக்கபட்டிருந்தது.

இவ்வாறு உயிரிழந்த 5 மாணவர்களும் 2005 ஆம் ஆண்டு உயர்தரத்தில் பரீட்சை எழுதி பெறுபேறுக்காக காத்திருந்த வேளையில் திருகோணமலை நகரை அண்டிய கடற்கரைக்கு முன்னால் இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு மனிதாபிமானமற்று படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களினால் வழக்கு தொடரப்பட்டு சந்தேகத்தின் பேரில் இலங்கை பாதுகாப்புப்படையின் படை வீரர்கள் கைது செய்யப்பட்டு போதிய சாட்சியங்கள் இல்லை என விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையான வைத்தியர் மனோகரன் என்பவரினால் ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு செல்லப்பட்ட போதிலும் 16 வருடங்கள் கடந்த நிலையில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான சரியான நீதி கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

2021இல் 120,000 இலட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்

2021ஆம் ஆண்டில் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 30,000 பேர் கட்டாருக்கும், 27,000 பேர் சவுதி அரேபியாவுக்கும், 20,000 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும், 1,400 பேர் தென் கொரியாவுக்கும், 1,100 பேர் சிங்கப்பூருக்கும், 1,600 பேர் சைப்ரஸுக்கும், 800 பேர் ஜப்பானுக்கும் சென்றுள்ளனர்.

கொரோனா தொற்று நோய்க்கு மத்தியிலும் இவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ், மலையக, முஸ்லிம் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவதற்கு புதிய நகல்; கட்சிகள் இணக்கம்

வடக்கு – கிழக்கு தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவதற்கு – பொதுவான அபிலாசைகளைப் பிரதி பலிக்கும் பொது ஆவணத்தைத் தயாரிக்கும் முயற்சியில் புதிய நகல் ஒன்று நேற்றைய கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்களின் பரிசீலனைக்கு அது வழங்கப்பட்ட பின்னர் தீர்மானம் எடுக்கப்படும்.

நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரனின் இல் லத்திலுள்ள அவரின் அலுவலகத்தில் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை புதிய நகல் ஆவணம் தயாரிக் கும் முயற்சியில் தலைவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம். பி., ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர், புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம். பி., ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம். பி., ரெலோவின் பேச்சாளரும் இந்த முயற்சி யின் இணைப்பாளருமான சுரேந்திரன் குருசாமி ஆகியோர் பங்குபற்றினர்.

புதிய ஆவண நகல் தயாரிப்புக்காக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம். பி. அனுப்பி வைத்த குறிப்பும் பரிசீலனைக்கு எடுத் துக்கொள்ளப்பட்டது. இந்த ஆவணத்தில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதற்கு அப்பாலும் செல்வோம் என 1987 முதல் இலங்கை – இந்தியத் தலைவர்கள் வழங்கிய உறுதி மொழிகள் நினைவூட்டப் பட்டுள்ளன.

13ஆவது திருத்தத்தில் வழங்கப் பட்டு, பின் கைவாங்கப்பட்ட, நடை முறைப்படுத்தப்படாத அதிகாரப் பகிர்வு விடயங்களை நடைமுறைப்படுத்துவது இந்திய – இலங்கை அரசுகளின் கடப்பாடு என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமஷ்டி அடிப்படையிலான தீர்வே இறுதி இலக்காக அமைய வேண்டும் என் பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சுமார் மூன்று பக்கங்களைக் கொண்ட இந்த நகல் ஆவணத்தின் பிரதிகள் அனைத்துத் தமிழர் தரப்புக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அவர்களின் பிரதிபலிப்பை கவனத்தில் எடுத்து ஆவணம் இறுதி செய்யப்படும் எனத் தெரிகின்றது.

நேற்றைய கூட்டத்துக்கு மனோ கணேசன் வராத நிலையில் இந்த ஆவணம் தொடர்பில் அவரின் அவதானிப்பு முக் கியமாக எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆவணத்தின் பிரதியைத் தம்முடன் எடுத்துச் சென்ற ரவூப் ஹக்கீம் எம். பி., தமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை வர்களுடன் விரிவாக உரையாடிய பின்னர் தமது பக்கக் கருத்துக்களைத் தெரிவிப்பார் எனவும் கூறப்பட்டது

Posted in Uncategorized

வெறும் கண்துடைப்புக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று கூறுவதாக வரைபு உள்ளது

யார் பெரியவர் யார் சிறியவர் என்ற ஏற்றத் தாழ்வு பிரச்சினை காரணமாகவே அமெரிக்காவுக்கு ஒரு தரப்பு செல்ல இன்னொரு தரப்பு 13 அமுல்படுத்துங்கள் என்று சொல்லி விடுதிகளில் கூட்டங்களை நடத்துகிறார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015 இலங்கை வந்திருந்த பாரதப் பிரதமர் என்னுடைய 13 வருட முதலமைச்சர் கால அனுபவத்தில் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு கூட்டு சமஸ்டி முறையே பொருத்தமானதென இலங்கை நாடாளுமன்றத்தில் தெளிவாக ஒரு கருத்தைச் சொன்னார். அவ்வாறு கூறுபவரிடம் 13ஆம் திருத்தத்தை அமல்படுத்த கோரி நாம் கடிதம் எழுதுவது எந்தளவு தூரம் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

யார் பெரியவர் யார் சிறியவர் என்ற ஏற்றத் தாழ்வு பிரச்சினை காரணமாகவே அமெரிக்காவுக்கு ஒரு தரப்பு செல்ல இன்னொரு தரப்பு 13 அமுல்படுத்துங்கள் என்று சொல்லி விடுதிகளில் கூட்டங்களை நடத்துகிறார்கள். இதன்போது முஸ்லிம் தரப்புகள் மற்றும் மலையகத்தைச் சேர்ந்த சகோதரர்களும் இணைந்துள்ளனர்.

முஸ்லிம்களின் அபிலாஷைகள் வித்தியாசமானது. அதேபோல மலையக தமிழர்களது அபிலாஷைகள் வித்தியாசமானது. வடகிழக்கில் வாழ்கின்ற தமிழர்களது அரசியல் அபிலாசைகள் வித்தியாசமானது.

ஒரு வாரத்துக்கு முன்னர் ஒரு வரைவு தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. ஒரு வாரத்துக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வரைபை ஏற்றுக் கொள்கிறோம். இது தொடர்பாக நேற்றைய தினம் இலங்கை தமிழரசுக்கட்சியினுடைய உயர்மட்டக்குழு கூட்டத்தில் அது பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.

இரண்டாவது வரைபு பற்றியும் இதன்போது விளக்கம் அளிக்கப்பட்டது. முதலாவது வரைபில் உள்ள பல விடயங்கள் இல்லாமலாக்கப்பட்டு வெறும் கண்துடைப்புக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று கூறுவதாக அந்த வரைவு காணப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழு ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை எட்டுவதற்கு சமஸ்டியையே முன்வைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

நாங்கள் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம் என கூறவில்லை. அதேபோல நாங்கள் மாகாண சபை தேர்தலை நடத்தவும் கூறத் தேவையில்லை. தேர்தல் சட்டங்களின் படி நடத்தியிருக்க வேண்டும். இந்திய பிரதமரிடம் தேர்தலை நடத்துங்கள் என்று கட்சிகள் கோருவதில் நியாயம் இல்லை. அதை கேட்க வேண்டிய அவசியமும் இல்லை.

வெளியில் ஓர் மாயை உண்டு அதாவது ரெலோ கொண்டு வந்த நல்ல விடயத்தை தமிழ் அரசுக் கட்சி எதிர்ப்பதாக எண்ணுகின்றனர் அது தவறு.

இந்தியாவின் கொல்லைப்புறம் வரையில் இன்னுமோர் நாடு வந்த பின்பும் அயல் நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என இந்தியா தொடர்ந்தும் கூறப்போகின்றதா என்பதனை இந்தியாதான் சிந்திக்க வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

“2022 இல் இலங்கைக்கு பாரிய அழிவு” எதிரணி அபாய மணி!!

இலங்கையை சிறப்பாக நிர்வகிப்போம் எனத் தெரிவித்த கோட்டாபய – மஹிந்த தரப்பினர், அனைத்தையும் நாசம் செய்துவிட்டனர் என ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக விமர்சித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, புத்தாண்டில் பாரிய அழிவு ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த 2022 ஆம் ஆண்டில் பாரிய அழிவொன்று ஏற்படப்போகிறது. விவசாய பிரச்சினைக்கு ஒமைக்ரோன், டெல்டா என்பவை காரணம் அல்ல. கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில் இருந்து அத்தியாவசிய சேவைகளாக அரிசி ஆலைகள் செயற்பட்டன. விவசாயிகளும் அவர்களுடைய வேலைகளை பார்த்தார்கள், அவர்கள் வீட்டில் இருக்கவில்லை.

நாம் தான் சிறப்பாக செய்தோம், எனக்குத் தான் அனைத்தும் தெரியும் எனக் கூறி அனைத்தையும் நாசம் செய்துவிட்டனர்.

இந்த உணவு தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு 100 வீதம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தான் காரணம்.

அரச தலைவர் அவர்களே, மக்கள் உண்பதற்கு வழியில்லாமல் உள்ளார்கள். ஒரு சில பகுதிகளில் மக்கள் ஒரு வேளை உணவை மாத்திரமே உட்கொள்கின்றனர். மக்களின் நிலைமையை நேரில் சென்று பாருங்கள்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

மோடிக்கு அனுப்பவுள்ள ஆவணம் -சம்பந்தன் வெளியிட்ட தகவல்

இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பவுள்ள ஆவணம் கைச்சாத்திடப்படும் என்பதில் எந்த விவாதமும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்  தெரிவித்தார்.

அந்த ஆவணம் தொடர்பிலான செயற்பாடுகள் இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக அவர் இன்று (02)கொழும்பு ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டார்.

தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை மிகவும் முக்கியமானது என்பதனால் அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் போது அது தொடர்பில் அதிக கரிசனை செலுத்துவதாகவும் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். முஸ்லிம் மக்களின் சகல விடயங்களும் ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டு இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

வாய்ப்பினை நழுவ விட்டால்!! தமிழினத்தின் எதிர்காலம் மோசடையும் – பகிரங்க அறைகூவல்

தற்போது ஏற்பட்டுள்ள பூகோள, பிராந்திய அரசியல், இராஜதந்திர மூலோபாயச் சூழலை உணர்ந்து கொள்ளாது ‘வாய்ப்பினை நழுவ விட்டால் தமிழினத்தின் எதிர்காலம் மேலும் மோசடைவதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளன’ என்கிறார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன்.

அவர் வெளியிட்டுள்ள ஊடகங்களுக்கான அறிக்கை ஒன்றில்,

குறிப்பறிந்து, தீர்க்கமான தீர்மானத்தினை எடுக்கும் அதேநேரம், தொடர் தாமதங்களை தவிர்த்து மிகமிக விரைவாக கூட்டு ஆவணத்தினை ஏகோபித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கை அரசாங்கமானது தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. அதேநேரம், ஆட்சியாளர்களின் பங்காளிகளுடனும் அரசியல் ரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன.

சிங்கள, பௌத்த கோட்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த 69இலட்சம் தென்னிலங்கை மக்களே ஆட்சியாளர்களை திட்டித்தீர்க்கின்ற அளவிற்கு வெறுப்பை காறி உமிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஆட்சியாளர்கள் இந்தியா, சீனா, அமெரிக்கா என்று தமக்காக திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் உள்ள அனைத்துக் கதவுகளையும் தட்ட ஆரம்பித்துள்ளார்கள்.

ஆனால் இலங்கையை மையப்படுத்தி ஏற்பட்டிருக்கும் பூகோளப்போட்டியின் பங்குதாரர்களான இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியன தன்னலன்களை மையப்படுத்தி காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளன.

இதில் அமெரிக்கா, இந்தியாவை முன்னிலைப்படுத்திய நகர்வினை இலங்கை விடயத்தில் கையாள்கின்றது. அதேபோன்றே ஏனைய மேற்குலக நாடுகளும் அவ்விதமான நகர்வினையே பின்பற்றுகின்றது. இந்நிலையில் இந்தியாவிடமிருந்து இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான கடன்களை பெறுவதற்கு தயாராகியுள்ளது.

மறுபக்கத்தில் சீனாவிடத்திலும் கடன்களை, நன்கொடைகளை பெறுவதற்கு தயாராகி வருகின்றது. இந்தப் பின்னணியில், எதிர்வரும் எட்டாம், ஒன்பதாம் திகதிகளில் சீன வெளிவிவகாரங்களுக்கான அமைச்சர் வாங் யி இலங்கைக்கு வருகின்றார்.

அவர் இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 65ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதையே பிரதான விடயமாக கொண்டிருக்கின்றார்.

அதேநேரம், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஒன்பதாம் திகதி இந்தியாவுக்குச் செல்வதற்கு தயாராக வருகின்றார். குஜராத்தில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பது காரணமாக கூறப்பட்டாலும், பிரதமர் மோடியைச் சந்திப்பது, இந்தியாவிடமிருந்து பெறக்கூடிய டொலர்களை விரைவுபடுத்துவது என்பன அந்தப் பயணத்தின் பின்னணிகளாக உள்ளன.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளும், ஏனைய முஸ்லிம், மலையக கட்சிகளும் இணைந்து தமிழ் பேசும் கட்சிகளாக பிரதமர் மோடிக்கு அனுப்பவுள்ள ஆவணத்தினை விரைவு படுத்த வேண்டியுள்ளது.

குறித்த ஆவணத்தினை அனுப்புவதன் ஊடாக, இந்தியா இலங்கை மீதான தனது பிடியை உறுதிப்படுத்தும் அதேநேரம், அதன் பயனாக ஆகக்குறைந்தது இந்திய இலங்கை ஒப்பந்தத்தினையாவது முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும்.

அதிகாரப் பகிர்வுக்கான முதற்படியாக அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை பாதுகாப்பதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் இயலுமானதாக இருக்கும். ஆட்சியில் உள்ள தரப்பினர் புதிய அரசியலமைப்பினை முன்னகர்த்துவதற்குரிய நடவடிக்கைளை கையிலெடுத்துள்ள நிலையில் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அகற்றப்படும் அபாயமுள்ளது.

தமிழர்களின் அபிலாஷைகளை 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்றாலும் கூட முதலில் இருப்பதைப் பாதுகாக்க வேண்டியுள்ளது.

ஆகவே 34 ஆண்டுகளுக்கு முன்னதாக 1987இல் தமிழ்த் தலைவர்கள் விட்ட தவறினால் ஏற்பட்ட விளைவுகள் (உயிரிழப்பு,சொத்தளிவு) அந்த நிலை மீண்டும் இழைத்துவிடக் கூடாது.

தமிழின விடுதலைப்போராட்டத்தில் சமர்களமாடிய தரப்புக்களே முதலில் 13ஐ பாதுகாப்போம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் அறவழியில் வந்த தலைமைகள் அதனை புறமொதுக்காது சிந்தித்துப் பார்க்க வேண்டியது கட்டாயமாகின்றது” என்றுள்ளது.

Posted in Uncategorized