சர்வதேச தலையீட்டுக்கு இடமளித்திருந்தால், நாட்டில் இன்னும் இரத்த வெள்ளம் பாய்ந்திருக்கும் – பிரதமர்

சர்வதேச தலையீட்டுக்கு இடமளித்திருந்தால், எமது நாட்டில் இன்னும் இரத்த வெள்ளம் பாய்ந்திருக்கும் என்று பிதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட “சந்தஹிரு சேய” தூபியை திறந்துவைக்கும் புண்ணிய நிகழ்வில் நேற்று பிற்பகல் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

போர் வீரர்களின் கரங்களினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மஹாசேயவினை, இராணுவத்தினருக்காக உலகுக்கு அர்ப்பணிக்கும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

நாட்டுக்காக மிகத் தீவிரமான முடிவுகளை எடுத்து அவற்றை வெற்றியடையச் செய்ததில் நான் அளவற்ற மகிழ்ச்சியை அனுபவித்துள்ளேன்.

அந்த சமயங்களில் நான் பெற்ற மகிழ்ச்சியை விட, இந்த மாபெரும் செயலை முடித்த தருணத்தை நான் அதிகம் அனுபவிக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும்.

யாழ்ப்பாணம் மேயர் துரையப்பா கொலையுடன் தொடர்புடைய கொலையாளிகளை கைது செய்ய சென்ற பொலிஸ் அதிகாரி பெஸ்தியன்பிள்ளை,

1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கோப்ரல் ஹேவாவசம் முதல் நந்திக்கடலில் இறுதி யுத்தத்தில் வீரமரணம்அடைந்த சிப்பாய் வரை எமது நாட்டிற்குச் சமாதானத்தை ஏற்படுத்துவதற்குப் பாடுபட்ட சகல போர் வீரர்களுக்கும், அதேபோன்று யுத்தத்தில் உயிர்நீத்த சகலதரப்பினருக்கும் – இந்த தூபியை வணங்கும் ஒவ்வொரு நொடியிலும், நன்றி கலந்த அஞ்சலி செலுத்தப்படும்.

உயிரிழந்த அனைவரும் எமது நாட்டின் எமது மக்கள். வரலாறு முழுவதும் நாம் போர்க்களத்தில் வென்றது திறமை மற்றும் துணிச்சலால் மட்டுமல்ல; இந்தநாட்டை ஒன்றிணைத்த துட்டகைமுனு மன்னர் வரலாற்று ரீதியாக எமக்கு அறிமுகப்படுத்திய – உன்னதமான மனிதாபிமான மரபுகளை நாம் இன்றும்பின்பற்றுவதே இதற்குக் காரணமாகும்.

போர் முடிந்ததும் நாம் கோட்டைகளை கட்டவில்லை, பாரிய குளங்களும், பாரிய தாதுகோபுரங்களுமே கட்டப்பட்டன. நாங்களும் அப்படியே செய்தோம்.

யுத்தம் நிறைவடைந்தவுடன் போர்வீரர்களுக்கான மஹாசேய தூபி ஒன்றை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினோம். இந்த தூபியினை திறந்து வைக்கும்இச்சந்தர்ப்பத்தில் அன்று காணப்பட்ட மரண அச்சம் குறித்து நான் நினைவுபடுத்த வேண்டும்.

1984ஆம் ஆண்டு,  டொலர் ஃபாம், கென்ட் ஃபாம், கொக்கிளாய் மீது தாக்குதல் நடத்தி, 91 பேரை கொன்று, எமது வரலாற்று இராசதானிகளின்கிராமங்களுக்கு மரண அச்சத்தை ஏற்படுத்தினர். அதன் பிறகு இலங்கை வரைபடத்தில் ‘எல்லை கிராமங்கள்’ என்ற தேசம் சேர்க்கப்பட்டது. நீண்ட காலம்செல்வதற்கு முன்னர் ஜய ஸ்ரீ மஹா போதிக்கும் மரண பயம்  ஏற்படுத்தப்பட்டது.

ஸ்ரீ மஹா போதிக்கு அருகில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 81 பேரை பயங்கரவாதிகள் கொன்றதுடன் வில்பத்து கிராமங்களில் 81 பேரை கொன்றனர்.

அடுத்து திருகோணமலை, மொரவேவ, மஹதிவுல்வௌ, மெதிரிகிரிய, பள்ளிய கொடல்ல, ஹொரவ்பத்தானை, ஜனகபுர, ஜயந்திபுர, வெலிஓயா, அம்பாறை, உஹன, கல்முனை, சியம்பலாண்டுவ, மொரவௌ மற்றும் மொனராகலை எல்லையில் உள்ள அத்திமலே வரையில் கிராம மக்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

கொழும்பு பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி மத்திய வங்கி, தெஹிவளை புகையிரத நிலையத்தில் குண்டுவெடிப்புடன் ஆரம்பமான பயணம் – 2009 ஆம் ஆண்டு தெற்கில் மாத்தறை அக்குரஸ்ஸவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒரு குழுவினர் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவை போன்று ஒவ்வொரு ஜனாதிபதியும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சித்துள்ளனர்.

ஜே. ஆர். ஜெயவர்த்தன திம்புவில் வட்டமேசை விவாதங்களை நடத்தியது எனக்கு நினைவிருக்கிறது. அது பலனலிக்காதமையால், ஜே.ஆர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மேற்கொண்டு இந்திய இராணுவம் வரவழைக்கப்பட்டு வடக்கு ஒப்படைக்கப்பட்டது. எங்கள் படையினர் முகாம்களில்மட்டுப்படுத்தப்பட்டனர். இராணுவம் முகாமை விட்டு வெளியேறுவதாயின் இந்திய இராணுவத்திடம் அனுமதி கோர வேண்டியிருந்தது. இவர்களில் எவரும்அன்றைய நமது முப்படை மீதும் அவர்களின் பலம் மீதும் நம்பிக்கை கொள்ளவில்லை.

அதன் பின்னர் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்துச் வரப்பட்டுகலந்துரையாடியமை நினைவிருக்கலாம். 800 பொலிஸாரை அடிமையாக்கி காட்டிக்கொடுத்தனர். அது மாத்திரமன்றி விடுதலைப் புலிகளுக்குஆயுதங்களையும் கொடுத்தார்கள். அந்த ஆயுதங்கள் இறுதியாக நமது வீரர்களுக்கு எதிராகவே ஓங்கப்பட்டன. திரு.கமல் குணரத்ன அவர்கள் இதனைஅறிந்திருப்பார். இறுதியில் அவரும் கொல்லப்பட்டார்.

அடுத்ததாக திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஒஸ்லோவில் ‘சுது நெலும’, ‘தவலம’ போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. போர்வீரர்கள் என்ற வார்த்தை அப்போது கைவிடப்பட்டிருந்ததாக எனக்குஞாபகம். போர் வீரர்களுக்கு ‘அரசாங்க பாதுகாப்புப் படைகள்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. போர் வீரர்களுக்கு மரியாதை கொடுப்பது அமைதிக்குத்தடையாகக் கருதப்பட்டது. ஆனால் அவர் மீதும் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

அதன்பிறகு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். புலிகளின் கட்டுப்பாட்டிற்கு தனியான பகுதிகள் ஒதுக்கப்பட்டன. போர் நிறுத்த உடன்படிக்கைக்கு நோர்வே அரசாங்கம் கண்காணிப்பாளர்களை நியமித்தது. எங்கள் இராணுவம் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டது. இவர்கள் யாருக்கும் நமது பாதுகாப்புப் படை மீது நம்பிக்கை இல்லை.

நான் பிரதமர் என்ற ரீதியில் வடக்கிற்குச் செல்லவிருந்தபோது, வடக்கிற்குச் செல்வதற்கு விடுதலைப் புலிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று நோர்வேயின்போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் என்னிடம் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. பிரதமரும் ஒரு நாட்டை சுற்றி வர அனுமதி பெற வேண்டும் என்றால் அதுஒரு தனியான நாடு.

எனது நாட்டிற்கு செல்ல நான் யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை என்று நினைத்தேன், நான் சுதந்திரமாக எப்போதாவது வடக்கிற்கு செல்வேன் என்றுகூறினேன்.

நமது நாட்டு மக்களின் பிள்ளைகளினால் உருவாக்கப்பட்ட பாதுகாப்புப் படை மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம். அதிமேதகு ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷ அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்தார். அவர், பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரிகளின் உதவியுடன், நாட்டிற்குஅமைதியை உரிமையாக்கும் பொறுப்பை நிறைவேற்ற பாதுகாப்புப் படைகளை வழிநடத்தினார்.

ஒரு நாட்டின் பாதுகாப்புப் படை மீது நம்பிக்கை இன்றேல், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பை இழக்க நேரிடும் என்றே அனைவரும் நம்புகிறார்கள். அதேபோன்று, எமது இராணுவத்தை மறந்துவிட்டு, வெளிநாட்டுப் படைகளையும், வெளிநாட்டுத் தலையீடுகளையும் அனுமதித்தால், எமது நாட்டில் இரத்தவெள்ளமே பாயும்.

இந்த சந்தஹிரு சேயாவின் மூலம் நினைவுகூரப்படும் போர்வீரர்களின் மனிதாபிமானப் பணியானது எமது வரலாற்றில் சுதந்திரத்திற்காக நடத்தப்பட்ட மிகக்கடினமான போர்களில் ஒன்றாக நான் கருதுகிறேன். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடங்கும் முன் அப்போதைய இங்கிலாந்து பிரதமரைசந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது.

விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்கி நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று நான் கூறியபோது, அது சாத்தியம் என்று நான் நினைக்கவில்லைஎன்று கூறினார். அதைப் பற்றி சில விடயங்களைச் கூறினார். இந்த விவகாரம் ஏற்கனவே சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அப்போதுஅவர் கூறினார்.

சர்வதேச அளவில் பல நாடுகளின் பங்களிப்புடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இப்போது அதிலிருந்து விடுபட முடியாது என்று கூறினார்.  இரண்டாவது விடயம் புலிகளுக்கு ஏற்கனவே தனியான கட்டுப்பாட்டு பகுதிகள், தனி வங்கிகள் மற்றும் தனியான நிதிகள் உள்ளன. தனியான நிர்வாகஅமைப்பு இருக்கிறது, அதுவரை நம் அரசாங்கங்கள் பார்த்துக் கொண்டிருந்துள்ளன. தற்போது எதுவும் செய்வதற்கில்லை என்று தெரிவித்தார்.

மேலும் புலிகளுக்கு தற்கொலை குண்டுதாரிகளும் உள்ளனர். ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளன. கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் விமானங்கள்உள்ளன. உங்களால் அவர்களை எதிர்கொள்ள முடியுமா என்று இங்கிலாந்து பிரதமர் அன்று என்னிடம் கேட்டார்.

உலகமே அவ்வாறு கூறிய போதும் எமது சொந்த மக்களின் பிள்ளைகளான எமது போர்வீரர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தி ருந்தோம்.எமதுபோர்வீரர்கள் ஈடு இணையற்ற தியாகத்தை செய்தனர். உலக வல்லரசுகள் கையெழுத்திட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் கிழித்தெறிந்தோம். எமதுபோர்வீரர்களுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து நாம் தற்போது விலகியுள்ளோம். இவற்றின் தாக்கம் இப்போது நமக்கு எதிராகவருவதை நாம் அறிவோம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நமது சுதந்திரத்தை நமக்கு முக்கியம்.

இரத்த வெள்ளத்தை தடுத்து, மரண பயத்தை ஒழித்து, எமது நாட்டை புகலிடமாக்கிய போர் வீரர்களுக்காக இந்த சந்தஹிரு சேய தூபியை அமைத்துபிரார்த்திப்பது எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்கட்டும் என்ற பிரார்த்தனையிலாகும்.

நம் நாடு எவ்வளவு சிறியதாக இருந்தாலும், நமக்கு நம் நாட்டில் வாழ சுதந்திரம் இருக்க வேண்டும். நமது நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன்செயற்பட்ட இராணுவ வீரர்களின் பாதுகாப்பையும், உயிர் தியாகத்தின் மூலம் இராணுவ வீரர்கள் எமக்கு உரிமையாக்கிய சுதந்திரத்தை பாதுகாப்பதனையும்எமது தலைவர்களும் எதிர்காலத்தில் உருவாகும் தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் இதன்போதுகூறினார்.

Posted in Uncategorized

சர்ச்சைக்குள்ளான 3 புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடி சர்ச்சைக்குள்ளான 3 புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என தெரிவித்துள்ளார்.

அதே நேரம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வரும் விவசாயிகள் வீடுகளுக்கு திரும்பிச் செல்லும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த அறிவிப்பை அடுத்து இந்தியாவின் பல தலைவர்கள் மோடி அரசுக்கு தமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அவர் தனது உரையில்…

2014-ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறோம். விவசாயிகளின் வேதனைகளை அறிந்தவன் என்பதால்தான், அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

சரியான விதைகள், உரம், பயிர்க் காப்பீடு என சிறு விவசாயிகளுக்கான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது. பயிர் சேதத்திற்காக விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சந்தைகளையும் வலுப்படுத்தி உள்ளோம். விளை பொருட்களுக்கான நியாயமான விலையை தற்போது விவசாயிகள் பெற்று வருகின்றனர்.

விவசாயிகளின் நலனுக்காகவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 3 வேளாண் சட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை. எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இந்த மாதம் தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான நடைமுறையை தொடங்குவோம்.

விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துவதற்காக கூடியுள்ள விவசாயிகள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்க முடியாது – புத்தளம் மேல் நீதிமன்றம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்க முடியாது என புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமது நீதிமன்றுக்கு பிணையளிக்கும் அதிகாரம் இல்லை என இவ்வழக்கை விசாரிக்கவென நியமிக்கப்பட்ட சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்து பிணை குறித்த தனது தீர்மானத்தை அறிவித்தார்.

அதன்படி இந்த வழக்கானது எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி சாட்சி விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அன்றைய தினம் வழக்கின் முதல் சாட்சியாளரை மன்றில் ஆஜராக நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியது.

அத்துடன் அன்றைய தினத்தில் பிரதிவாதிகளான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவரையும் மன்றில் கண்டிப்பாக ஆஜர் செய்யுமாறு நீதிபதி குமாரி அபேரத்ன, நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சருக்கு விஷேட உத்தரவினைப் பிறப்பித்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிராக சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பகிர்வுப் பத்திரம் மீதான வழக்கு விசாரணை இன்று மீளவும் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரிக்கவென விஷேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்த நிலையில், அவர் முன்னிலையிலேயே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணைக்கு வந்தவுடன், முதலில் கடந்த தவணையின் போது அறிவித்ததர்கு அமைய, நீதிபதி குமாரி அபேரத்ன, பிரதிவாதிகளின் பிணைக் கோரிக்கை தொடர்பிலான தனது தீர்மானத்தை அறிவித்தார்.

பிரதிவாதிகளுக்கு பிணையளிக்க இந்த நீதிமன்றுக்கு பிணையளிக்கும் அதிகாரம் இல்லை என்பதால், அவர்கலின் பிணைக் கோரிக்கை நிராகரிக்கபப்டுகிறது.´ என மேல் நீதிமன்ற நீதிபதி தனது பிணை குறித்த தீர்ப்பில் அறிவித்தார்.

நினைவு கூரும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால் எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் – ரெலோவின் தலைவர் செல்வம்!

போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால் எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்இ “இந்த மாதம் கார்த்திகை மாதம் என்பதனால் நீதிமன்ற தடை உத்தரவுகளை வீடு வீடாக சென்று ஒவ்வொருவருக்கும் பொலிஸார் கொடுத்து வருகின்றனர்.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. போர் மௌனித்துவிட்டதுஇ போரில் தனது இனம்இ மண்ணுக்காக மரணித்தவர்களை நினைவு கூருவதற்கான வாய்ப்புக்களை இன்று அரசாங்கம் தடுக்கின்றது.

இவ்வாறு தடுப்பதன் மூலம் எதனை நீங்கள் சாதிக்கபோகின்றீர்கள்?“ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Posted in Uncategorized

மத்திய அரசின் ஒப்பந்த  வேலைகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை

மத்திய அரசாங்கத்தினால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு செய்து முடிக்கப்பட்ட பல வேலைகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் மாகாணங்களுக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதி  வேலைக்கான கொடுப்பனவு அதிகமான ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் முழுமையாக வழங்கப்படாது உள்ளதென இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் வடமாகாண கிளையின் தலைவர் அன்ரன் றேமன்ஸ் குரூஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “2019ஆம் ஆண்டு ஏப்ரல் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா காரணமாக பொருட்களின் விலைகள்  அதிகரித்து, தற்போது மிகவும் எதிர்பாராத வகையில் பொருட்களின விலை அதி உச்சத்தை அடைந்துள்ளது.

இலங்கை வரலாற்றில் இது முதல் முறையாகவும் உள்ளது. இது தனியாக கம்பி, சீமெந்து மட்டும் அல்லாது கட்டிடத்திற்கு தேவையான அனைத்து வகை கற்கள், அலுமினியம், கூரை பொருட்கள் மற்றும் சிறிய சிறிய சகல கட்டுமான பொருட்களும் விலை அதிகரித்துள்ளது. ஆனால் இதன் மேலதிக விலை ஏற்றத்திற்கான செலவை வேலை தருநர்கள் தர மறுக்கின்றார்கள்.

5 மில்லியனுக்கும் 3 மாத ஒப்பந்த காலத்திற்கு மேற்பட்ட வேலைகளுக்கு விலையேற்றத்திற்கான சூத்திரம் பாவிப்பதற்கு இடம் இருந்தும் அந்த நிபந்தனை செயல்படுத்த முடியாதவாறு நிபந்தனைகள் மாற்றியமைத்து பல ஒப்பந்தங்கள் கோரப்படுகின்றது.

மேலும் அந்த நிபந்தனைகள் உள்ள ஒப்பந்தத்திலும் கூட சில பொருட்களின்  விலையேற்றத்ததை அச் சூத்திரம் மூலம் பெறமுடியாமல் உள்ளது.

அதன்படி ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒரு ஒப்பந்தகாரருக்கு முற்பணமானது 14 நாட்களிலும் இடைக் கொடுப்பனவு 35 நாட்களிலும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறு கொடுப்பனவு கொடுக்கப்படுவதில்லை. அந்த தாமதத்திற்கான வட்டியும் கொடுக்கப்படுவதில்லை.

இதில் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டமானது” 2016ம் ஆண்டு தொடக்கம் 2020 ஆண்டு வரை செய்யப்பட்ட பல வேலைக்கு கொடுப்பனவு  ஒப்பந்தகாரர்களுக்கு கொடுக்கப்படவில்லை.

இத்திட்டமானது மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் கட்டிடத் திணைக்களம், திட்ட முகாமைத்துவ அலுவலகம் ஊடாகவும் வேலைகள் செய்து 2018 ஆண்டு தொடக்கம் கொடுப்பனவு எடுக்காத ஒப்பந்தகாரர்களும் உள்ளார்கள். அதன் பெறுமதி 16.50 கோடி ரூபா ஆகும் அதில் மேலும் வழங்கப்பட்ட வேலைகளை முடிவுறுத்துவதற்கு 62 கோடி ரூபா தேவையாக உள்ளது.

அதே போன்று  கிராம உட்கட்டுமான அபிவிருத்தி திட்டம் மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு வேலைகள் முடிவுறுத்தப்பட்டு சரியாக இரண்டு வருடம் கடந்தும் 80 வீதமான கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை.

அதன் பெறுமதி 12 கோடி ரூபா ஆகும். மேலும் மத்திய அரசால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு செய்து முடிக்கப்பட்ட பல வேலைகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படாமல் உள்ளது.

மேலும் மாகாணங்களுக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதி  வேலைக்கான கொடுப்பனவு அதிகமான ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் முழுமையாக வழங்கப்படாதுள்ளது.

தற்போதைய அரசாங்கம் அந்த திட்டத்தை நிறுத்தி உள்ளமையால் பல வேலைகள் முடிவுறுத்தப் படாமலும் உள்ளது. முடிவுறுத்தப்பட்ட வேலையிலும் கொடுப்பனவு கொடுக்கப்படவில்லை.

இவ்வாறு பல பிரச்சனைகள் உள்ள எமது அங்கத்தவர்கள் பலர் தொழிலை தொடர்ந்து நடாத்த முடியாமலும் வங்கிகளில் இருந்து எடுத்த கடன்களை கட்ட முடியாமலும் உள்ளார்கள்.

எனவே இது தொடர்பாக நாம் ஆளுநருடன்  உயரதிகாரிகளுடனும்  கதைப்பதற்கு நேரம் கேட்டு 2019 ஆண்டு ஜுலை மாதத்திற்கு பின்னர் தொடக்கம் இன்று வரை பல கடிதங்கள்,தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும்  எம்மை அவர்கள் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கூட தரவில்லை.

எனவே எமக்கு வேறு வழியில்லாமல் இந்த ஊடக சந்திப்பை முதல் முறையாக கூட்டி எங்களது பிரச்சினைகளை உங்கள் ஊடாக வெளிகொண்டு  வருகிறோம்.

இதற்கு பிறகும் எமக்கான தீர்வு கிடைக்கவில்லையாயின் நாம் வீதிகளில் இறங்கி போராடுவதை தவிர வேறு வழியில்லை. இதனால் ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி அது சார்ந்த பல தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இராணுவத்துக்கு எதற்கு அதிக நிதி? – ரெலோவின் தலைவர் செல்வம்

நாடு வறுமையில் சிக்கித் தவிக்கையில் இராணுவத்துக்கு எதற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவா இந்த நகர்வு என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் மேலும் உயரும் என எதிர்வுகூறப்படுகின்றது. இதனை தடுப்பதற்கான வல்லமை இந்த அரசாங்கத்திடம் இல்லை.

இந்நிலையில் இராணுவத்துக்கு பலகோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு வறுமையில் சிக்கித்தவிக்கையில் எதற்கு இராணுவத்துக்கு அதிக நிதி? இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவா இவ்வாறு அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விடுதலைப்பு புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் எனக் கூறப்படுகின்றது. எனவே, யாருடன் போரிடப்போகின்றீர்கள். பாகிஸ்தானுடனா, இந்தியாவுடனா அல்லது தமிழர்களுடனா என்ற கேள்வியும் எழுகின்றது. ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி நீதிமன்றில் 51 பேருக்கு தடையுத்தரவு

மாவீரர் நாள் நிலைவேந்தலிற்கு கிளிநொச்சி நீதிமன்றிலும் தடையுத்தரவு இன்று பெறப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிசாரால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இவ்வாறு தடையுத்தரவு இன்றைய தினம் பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், விசுவமடு, முழங்காவில் ஆகிய பகுதிகளில் மாவீரர் துயிலுமில்லங்கள் காணப்படுகின்றன. குறித்த துயிலுமில்லங்களில் கடந்த 2017 மற்றம் 18ம் ஆண்டுகளில் மாவீர்நாள் நினைவேந்தல்கள் இடம்பெற்றன.

இந்த நிலயைில் 2019ம் ஆண்டுக்க பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மாவீரர் நாள் கிளிநொச்சி நீதிமன்றில் 51 பேருக்கு தடையுத்தரவு நினைவேந்தல்களிற்கு தடைகள் பிறப்பிக்கப்பட்டன. எதிர்வரும் 27ம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலயைில் இன்றைய தினம் தடையுத்தரவுகள் பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸாரால், 9 பேருக்கு எதிராக இன்று நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபைதவிசாளர் வேழமாலிகிதன், கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் தவபாலன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான, சுப்பையா, சிவகுமார், இயேசுதாசன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி ஆகியோருக்கே இவ்வாறு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இதேவேளை தர்மபுரம் பொலிஸாரால் 02 பேருக்கும், அக்கராயன் பொலிஸாரால் 02 பேருக்கும், பளை பொலிஸாரால்18 பேருக்கும் , முழங்காவில் பொலிஸாரால் 04 பேருக்கும், மருதங்கேணி பொலிஸாரால் 09 பேருக்கும், பூநகரி பொலிஸாரால் 07 பேருக்கும், தடையுத்தரவுகள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த நபர்கள் அல்லது அவர்களின் உறவுகளோ, ஆர்வலர்களோ சமய குருமார்களோ, ஒத்துழைப்பாளர்களோ, நபர்களுா யாவரும் தடைசெய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ அமைப்பின் இறந்தவர்களை நினைந்து எந்த செயலையும் குறித்த காலப்பகுதியில் செய்ய்கூடாது என கட்டளை வழங்குமாறு நீதிமன்றில் தடையுத்தரவு கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜோ பைடனின் அதிகாரங்கள் தற்காலிகமாக கமலா ஹாரிஸிற்கு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அதிகாரங்கள் தற்காலிகமாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பதவி வகிக்கிறார். துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவி வகிக்கிறார்.

இன்று, தலைநகர் வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீடு மருத்துவ மையத்தில், மருத்துவப் பரிசோதனைக்காக, ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெருங்குடல் தொடர்பான கொலோனோஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வைத்தியசாலையில் வழக்கமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலோனோஸ்கோபி சிகிச்சையின் போது ஜனாதிபதி ஜோ பைடனுக்கு மயக்க மருந்து செலுத்தப்படும். இதன் காரணாக, அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப் பொறுப்பு, துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு வழங்கப்படுகிறது.

Posted in Uncategorized

‘முன்னாள் போராளிகள் மனித உரிமை ஆணைக்குழுவில் மனமுருகி கோரிக்கை’

நவம்பர் 27 ஆம் திகதி விளக்கேற்ற அனுமதிக்குமாறு முன்னாள் போராளிகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் மனமுருகி கோரிக்கை விடுத்துள்ளனர். –எதிர்வரும் 27ஆம் திகதி எங்களது உறவினர்கள், சக நண்பர்கள் அடக்கப்பட்ட இடத்தில் நாங்கள் விளக்கேற்றி, அதில் விழுந்து அழுது, எங்களது கவலைகளை ஞாபகப்படுத்த அந்த தினத்தினை தருமாறு அன்பாக வேண்டுகின்றோம் என ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மனித உரிமை ஆணைக்குழு எதிரில், வடக்கில் வாழும் முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் 7 பேர் ஆஜராகி இவ்வாறு கோரிக்கையினை முன்வைத்தனர்.

ஆணைக்குழுவின் தலைவரும், உயர்நீதிமன்ற நீதிபதியுமான நவாஸ் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, சட்டத்திணைக்களத்தின் அரச சட்டத்தரணிகளும் இவ்வமர்வில் சமுகமளித்திருந்தனர் முன்னாள் போராளிகளை ஆணைக்குழு முன் கருத்து தெரிவிக்க மலை

யக மக்கள் முன்னணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனும், அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சதீஷ்குமாரும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது ,

நான் வவுனியாவில் வாழ்கின்றேன். யுத்த காலத்தில் நான் ஷெல்லடிபட்டு கால்களை இழந்துள்ளேன். எனது மனைவி இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு வேறொருவரை திருமணம் முடித்து வெளிநாடு சென்றுவிட்டாள். நான் வவுனியாவில் சில்லறைக்கடை ஒன்றை வைத்து எனது 2 குழந்தைகளையும் வளர்த்து வருகின்றேன். நான் கொழும்பில் பிறந்து வாழ்ந்தவன். எனது கல்வியை பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கற்றவன். எனது அடையாள அட்டை இன்றும் கொழும்பு முகவரியிலேயேதான் இருக்கின்றது. நான் 20 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்தேன்.

அதன் பின்னர் இறுதி யுத்தத்தில் காயப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின்னர் காயங்களுடன் மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்கால் ஊடாக வவுனியாவில் அகதி முகாமில் இருந்தேன். அதன் பின்னர் என்னை இராணுவத்தினர் கைதுசெய்து பல சிறைச்சாலைகளில் வைத்தனர். என்மீது பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கொன்றினை வவுனியா உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பின்னர் விடுதலையானேன். நான் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அரச கடன் ரூ. 2 இலட்சம் தரப்பட்டு சுயதொழில் ஒன்றை ஆரம்பிப்பித்தேன்.

ஒவ்வொரு வருடத்தின் நவம்பர் மாதம் 27ஆம் திகதியன்று விடுதலைப்புலிகளின் உறவினர்கள், தமது குடும்ப உறுப்பினர் மறைந்த தினத்தினை நினைவுகூர அனுமதிக்குமாறு அரசாங்கத்திடமும், இந்த ஆணைக்குழுவிடமும் கேட்கின்றோம். எங்களது உறவினர்கள், சக நண்பர்கள் அடக்கப்பட்ட இடத்தில் நாங்கள் விளக்கேற்றி அதில் விழுந்து அழுது எங்களது கவலைகளை ஞாபகப்படுத்தவே அந்த தினத்தினைத் தருமாறு அன்பாக வேண்டுகின்றோம்.

இராணுவம் வெற்றி தினத்தினை நினைவு கூர்கின்றது. இந்திய இராணுவம் இலங்கையில் இறந்த தமது உறுப்பினர்களுக்குக் கூட கோப்பாயில் ஒரு தூபியமைக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அத்துடன் ஜே.வி.பி. புரட்சியில் இறந்தவர்களுக்கு 2 தினங்களை அரசாங்கம் நினைவுகூர அனுமதித்துள்ளது. ஏன் இந்த நாட்டில் பிறந்த எங்களுக்கு எங்களது உறவுகளை நினைத்து மெழுகுத்திரி ஏற்றுவதற்கு அனுமதி மறுக்கின்றனர்? எங்களது இறந்த உறவினர்கள், நண்பர்கள், சகோதர சகோதரிகளுக்கு நினைவு கூர அனுமதி தர மறுக்கின்றார்கள். இது சாதாரண எங்களது உரிமையாகும்.

நாங்கள் நினைவு கூர ஆரம்பித்தால் எங்கள் வீடுகளில் இராணுவத்தினரும், சி.ஐ.டி யினரும் எங்களை சுற்றிவளைக்கின்றார்கள். கைதுசெய்கின்றார்கள். இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எங்கள் வீடுகளுக்கு அடிக்கடி சி.ஐ.டி. யினர் வருகை தருகின்றனர். இதனால் அயலவர்களும், எங்களது குழந்தைகளும் அச்சமடைகின்றனர்.

நாங்கள் தற்பொழுது இங்கு கொழும்பு வந்து ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிக்க வந்தால்கூட எங்கள் வீடுகளுக்கு சி.ஐ.டி.யினர் போய் எமது பிள்ளைகளிடம் விசாரணை செய்கின்றனர். எங்கள் வாழ்நாளில் இதுவே ஒரு ஆணைக்குழுவுக்கு வந்து எங்களது கருத்துக்களை கூறும் முதல் சந்தர்ப்பமாகும்.

நாங்களும் இந்த சமூகத்தில் எல்லோரும் போன்று சமமாகவும், சமாதானமாகவும், நற்பிரஜையாகவும் வாழவே விரும்புகின்றோம் . நாங்கள் எங்களது நாளாந்த வாழ்க்கையை நடத்த முடியாமல் உள்ளது. எங்களை முன்னாள் போராளிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று பாதுகாப்புப் படையினரும், அரச அதிகாரிகளும் சமூகத்திலிருந்து விலக்கி வைத்துப் பார்க்கின்றனர். அதுமட்டுமல்ல, எங்களை சந்தேகக்கண் கொண்டே பார்க்கின்றனர். கணவன், மனைவியை இழந்த போராளிகளுக்கு இரண்டாம் திருமண முடிப்பதற்குக் கூட முடியாமல் உள்ளது. பாதுகாப்புப் படையினரும், சி.ஐ.டி. அதிகாரிகளும் வீடு வருவதால் எவரும் எங்களைத் திருமண முடிப்பதற்கு முன்வருவதில்லை.

எங்களது வடக்கிலுள்ள காணிகள் மீள ஒப்படைக்கப்படல் வேண்டும், காணாமல் போன எங்களது உறவுகளுக்கு அவர்கள் பற்றிய உண்மையான நிலை தெளிவுபடுத்தப்படல் வேண்டும். இந்து மதத்திற்கும், பௌத்த மதத்திற்கு பாரிய சம்பந்தமுள்ளது. பௌத்த மத சின்னங்கள் எனச் சொல்லி வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள், நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர். இவை நிறுத்தப்படல் வேண்டும்.

எங்களது காணி நிலங்களை மகாவலி, சொர்ணபூமி, வீடமைப்பு, வனவளம், சுற்றாடல் சூழலியல் என திட்டமிட்டு ஆக்கிரமிக்கின்றனர். சகல சமூகங்களும் சமாதானமாக, சமமாக வாழ வழிவகுக்கப்பட வேண்டும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வதாரம், வீடு, புனரமைப்பு புனர்வாழ்வுத் திட்டங்களை உரிய முறைப்படி அரசாங்கம் வழங்குதல் வேண்டும்.
ஆசியாவிலேயே கடல் நீர்மூழ்கிக் கப்பல், ஹெலிகொப்டர் தயாரிப்புகளை செய்தது விடுதலைப்புலிகள் அமைப்பு. எவ்வாறு உதவி வழங்கப்படல் வேண்டும் என எங்களுக்குத் தெரியும். இன்றும் எங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துதான் வருகின்றோம். அதற்கான சக்தி எங்களிடம் உள்ளது – என்று குறிப்பிட்டார்.

நிதி வேண்டாம்; நீதியே வேண்டும் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவி

எங்களுடைய போராட்டத்தை நீர்த்து போக செய்வதற்காகவே காணாமல் போனவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா, தமக்கு அந்த நிதி வேண்டாம் எனவும் நீதியே வேண்டும் எனவும்  தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக வரவு – செலவுத்திட்டத்தில் (பட்ஜெட்) 300 மில்லியன் ரூபாய் நிதி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், “நாங்கள் 1,838ஆவது நாளாக இன்று போராடிக் கொண்டிருக்கின்றோம். எங்களுடைய போராட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்காக பாராளுமன்ற வரவு – செலவுத் திட்டத்திலே, காணாமல் போனவர்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளனர்.

“இவ்வாறு நிதி ஒதுக்கியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். எந்த ஒரு தாயும் இந்த நிதியை வேண்டுவதற்கு தயாராக இல்லை. ஏனென்றால், நாங்கள் இந்தப் போராட்டத்தில் உண்மையான ஆதாரங்களுடன், கண்கண்ட சாட்சியங்களுடன் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

“எங்களுடைய போராட்டத்துக்கும்,  எங்களுடைய பிள்ளைகளை எங்கே கொண்டு சென்று வைத்திருக்கிறார்கள் என்பதற்கும் பதில் கூற வேண்டும். எங்களுக்கு நிதியைத் தந்து ஏமாற்ற வேண்டாம்” என்றார்.