இலங்கையில் பொலிஸ் நிலையங்களின் தொடர்பாடல் வசதியை நவீன முறையில் மேம்படுத்த சீன அரசினால் புதிய தொடர்பாடல் சாதனம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெண்க் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இவரது விஜயத்தை முன்நிலைப்படுத்தியே சீனா இந்த அதிரடி நடவடிக்கையை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு வழங்கப்பட்ட தொடர்பாடல் சாதனம் ஊடாக பொலிஸ் நிலையங்கள், பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சிறந்த முறையில் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.