காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்தல் கண்துடைப்பு நாடகம், குறித்த விடையம் தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி தலைவருமான சபா.குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அரசாங்கம் சந்தித்து கலந்துரையாட எடுக்கும் முயற்சி வெறும் கண்துடைப்பு ஏமாற்று நாடகமே தவிர பாதிக்கப்பட்ட தரப்புக்கு உண்மையான நீதிக்கான கதவு திறப்பாக இல்லை காரணம் ஆளும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகப்போகின்றது தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட உறவுகள் தொடர் போராட்டங்களை தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் முன்னெடுத்து வருகின்றனர் அவர்களின் போராட்டங்களை கொச்சைப் படுத்தி இந்த அரசாங்கத்தின் முதன்மையான அமைச்சர்கள் விமர்சித்து வருகின்றனர் அவ்வாறான நிலையில் தற்போது ஐ நா மனிதவுரிமைப் பேரவையின் அறிக்கைகளை திசை திருப்பும் வகையில் இப்படியான கலந்துரையாடல்களுக்கு அரசாங்கம் தயாராகின்றது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அண்மையில் கூறினார் காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் புலிகள் அவர்கள் நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவித்தவர்கள் என பொறுப்பற்ற வகையில் தெரிவித்தார் அத்துடன் விமல் வீரவன்ச காணாமல் ஆக்கப்பட்டோர் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளனர் தோண்டி எடுங்கள் என கூறினார் சில மாதங்களுக்கு முன்னர். அமைச்சர் உதய கம்பன்பில கூறினார் காணாமல் ஆக்கப்பட்டோர் பலர் வெளிநாட்டில் வாழ்கின்றார்கள் என்று ஐனாதிபதி ,பிரதமர் போன்றோர் காணாமல் ஆக்கப்பட்டோர்,அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என கூறியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் உள்நாட்டில் எங்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்புக்கள் இல்லை என்பதை தெளிவாக கூறி சர்வதேச விசாரணை மூலமே எங்களுக்கு நீதி வேண்டும் என்று போராடி வருகின்ற போது அரசாங்கத்தின் இவ்வாறான முயற்சிகள் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுகின்ற கபட நாடகம் என்பதே உண்மை.
ஐனாதிபதி உண்மையாக பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கைகளை அறிய விரும்பினால் நேரடியாக சென்று தானே கேட்டறியலாம் ஆனால் மூன்றாம் நபரை வைத்து கையாள்வது உளப்பூர்வமான செயற்பாடாக அமைய மாட்டாது.
பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்கள் நாளுக்கு நாள் சாவடையும் போது இன்றுவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 84 பேர் நடைப்பிணங்களாக அலைந்து சாவடைந்துள்ளனர். தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையாக அவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.