குருந்தூர் மலை அகழ்வாராய்ச்சியில் திடீர் திருப்பம்: தாரா லிங்கம் கண்டுபிடிப்பு!

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலையில் தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் இன்று புதன்கிழமை(10) சிங்கள நாளிதழான தினமின செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம்-18 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவால் குருந்தூர் மலையில் குருந்தாவசோக புராதன விகாரையின் சிதைவுகள் இருப்பதாகத் தெரிவித்து தொல்லியல் ஆய்வுப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, இவ்வாறு மீட்கப்பட்ட தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர்கால எட்டுப்படை தாரா லிங்கம் எனப் பலராலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஒத்த பல தாராலிங்கங்கள் (எட்டுப் பட்டை லிங்கம்) தமிழகத்தில் காணப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.