சீன வங்கியிடமிருந்து 180 மில்லியன் கடன்

சீனாவின் ஆசிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீட்டு வங்கியிடமிருந்து 180 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது.

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஊடாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறையினருக்கு ஒத்துழைக்கும் வகையிலான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க இக்கடனுதவி பயன்படவுள்ளது.