தனிப்பட்ட விஜயமாக டுபாய் சென்றார் நிதி அமைச்சர் பசில்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று காலை டுபாய் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வுடன் அவரது மனைவியும் பயணத்தை மேற்கொண்டிருந்தார் என அறியமுடிகின்றது.

நள்ளிரவு 12.55 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் EK-649 இல் இருந்து டுபாய்க்கு புறப்பட்டனர் என்றும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இது தனிப்பட்ட வருகை என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.