மன்னாரில் வீட்டு திட்டங்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைப் பணத்தை வழங்குமாறு கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது

மன்னாரில் வீட்டு திட்டங்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைப் பணத்தை வழங்குமாறு கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சஜித் பிரேமதாசவினால் தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக வழங்கப்பட்டிருந்த வீட்டு திட்டங்களுக்கு ஆரம்ப கட்ட நிதி மாத்திரம் வழங்கப்பட்டிருந்தது.

கடந்த அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பி வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் கடன்பட்டு தங்களுடைய நகைகளை அடகு வைத்தும் வீடுகளை கட்டி முடித்திருந்தார்கள்.

சில வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் இருக்கின்றது ஆட்சி மாற்றத்தின் பின் அந்த மக்களுக்கான மீதி பணம் வழங்கப்படவில்லை.

அதனால் நிலுவையில் உள்ள பணத்தை வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்களால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

நேற்று (30-03-21)காலை 9.30. மணி அளவில் மன்னார் நகர சபை மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது மன்னார் பொது வைத்தியசாலை ஊடாக மன்னார் மாவட்டச் செயலகத்தை வந்தடைந்து.

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவபாலன் குணபாலன் அவர்களிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ வினோ நோகராதலிங்கம் அவர்களும் , நகரசபை பிரதேச சபை உறுப்பினர்கள், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ, மற்றும் பணியாளர்கள் சமூக அமைப்புகள் வீட்டுத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் என்று பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.