ரெலோவின் உத்தியோகபூர்வ பேச்சாளராக சுரேந்திரன் நியமனம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உத்தியோகபூர்வ பேச்சாளராக குருசாமி சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது(28-02-2021).

இதன்போது கட்சிக்கு பேச்சாளர் ஒருவர் அவசியம் என்று அனைவராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கு ஒரு பேச்சாளர் தேவை என்ற காரணத்தினால் எமது கட்சியின் பேச்சாளராகக் குருசாமி சுரேன் அவர்கள் செயற்படுவார்.

அதனை ஏகமனதாக தலைமைக்குழு தெரிவு செய்துள்ளது. அவர் அனைத்து விடயங்களையும் கையாளுகின்ற அதேநேரம், எமது கட்சி எடுக்கின்ற தீர்மானங்களையும், அரசியல் ரீதியாக இங்கிருக்கின்ற தூதரகங்களைச் சந்திக்கின்ற செயற்பாடுகளையும் அவர் ஊடாகவே இனி மேற்கொள்ளப்படும்.