வவுனியா மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் உதயன்க்கு கண்ணீர் அஞ்சலிகள்

உதயன் முன்னாள் வவுனியா மாவட்ட அரசியல் பொறுப்பாளர் 1988 PLOT இயக்கத்தினால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

வவுனியா நொச்சிமோட்டை பிறப்பிடமாகக் கொண்டவர்.

அன்னையின் மடியில்: 1958.11 .19
மரணம். 1988.08.08

ஆரம்ப காலகட்டத்தில் ஈரோஸ் இயக்கம் மூலம் விடுதலைப் போராட்டதில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அரச படைகளால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காலத்தில் அங்கிருந்த ரெலோ தோழர்களுடன் ஏற்பட்ட நட்பு அவரை ரெலோ இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ள தூண்டுதலாக அமைந்தது.

பின்னர் ஏற்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு பின் அரசியல் கைதிகளின் விடுதலையில் இவரும் ஒருவராக விடுவிக்கப்பட்டு வன்னி மாவட்ட அரசியல் பொறுப்பாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

புளட் இயக்கத்தில் இருந்த சிலருக்கும், ரெலோ இயக்கத்தில் இருந்த
சிலருக்கும் ,சிறையில் இருந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான கருத்து முரண்பாடுகள் !!!!இவர்கள் விடுதலை ஆன பின்பும் வவுனியா மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்றது.

1988 காலப்பகுதிகளில் வவுனியா மாவட்டத்தில் பிளாட் இயக்கத்திற்கும், ரெலோ இயக்கத்திற்கும் இடையில் தவிர்க்க முடியாத சில ஆயுத மோதல்கள் ஏற்பட்டன.

இதில் இரண்டு பகுதிகளும் சிலர் கொல்லப்பட்டார்கள்.

இந்த கசப்பான ”’அனுபவங்கள் எம்மை காயப்படுத்தினாலும் ,”காலத்தின் சூழ்நிலைக்கேற்ப எம்மை மாற்றிக்கொள்ள வேண்டியதேவை.

ஆயுத மோதல்களில் இடுபட்ட முக்கியமானவர்கள் காலப்போக்கில் இரண்டு இயக்கங்களையும் விட்டு வெளியேறிவிட்டார்கள், அதில் ஒரு சிலர் மரணித்தும் விட்டார்கள்.

இன்றைய PLOT அமைப்பின் தலைவர்
தர்மலிங்கம் சித்தார்த்தர். மற்றும் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இந்த கசப்பான அனுபவங்களை மறந்துவிட்டு மக்களின் விடுதலைக்காக கைகோர்த்து வேலை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

குரோத எண்ணங்கள், பழிவாங்கும் படலங்கள் எம்மக்களின் உரிமைப் போராட்டத்தை சிதைத்துவிடும்.

மரணத்தின் வலி என்பது எப்போதும் மறக்க முடியாத ஒன்றுதான்.

நாம் சிந்தித்து செயலாற்றி இருந்தால் இன்று பல மரணங்களை தவிர்த்து எமது விடுதலையை வென்று இருக்கலாம்.

நன்றி

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சுவிஸ் கிளை.