மட்டக்களப்பு தாந்தாமலையில் இராணுவத்தினருக்காக காடுகளை சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள தாந்தாமலை பிரதேசத்திலுள்ள 1500 ஏக்கர் காடுகளை இன்று இராணுவத்தினரின் தேவைக்காக சட்டவிரோதமாக கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில், இரா.சாணக்கியன்,ரெலோ கோ.கருணாகரம் ஆகியோர் இந்த சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அதனையடுத்து இந்த செயற்பாடு தொடர்பில் இன்று இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம் ஆகியோர் கடும் எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தனர்.
அத்துடன், குறித்த நடவடிக்கையினை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். இதனை இணைத்தலைவர் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனும் ஏற்றுக்கொண்டிருந்ததுடன், பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதனையடுத்து மாவட்ட அபிவிருத்திக் குழுவில் தீர்மானம் எடுப்பதற்காகவும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.