ஜீ.எஸ்.பி. குறித்துப் பேச இலங்கை வருகிறது  ஐரோப்பிய ஒன்றிய குழு

ஜீ.எஸ்.பி. வரிசலுகையை இலங்கைக்கு தொடர்ந்தும் வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை இணையவழியூடாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறு நாட்டுக்கு வரவுள்ள பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் உள்ளிட்ட பல உயர்மட்ட அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ளது.